624 தற்காலிகப் பணியிடங்களுக்கு (RMSA - KI தலைப்பு) 31.12.2024 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக கல்வியில் பின் தங்கிய 26 ஒன்றியங்களில் 20 மாதிரிப் பள்ளிகள் 2013-2014 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டு அப்பள்ளிகளுக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 624 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது- இப்பணியிடங்களுக்கு 01.04.2021 முதல் 31.03.2024 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டது -தற்போது 01.10.2024 முதல் 31.12.2024 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல்-சார்பு. பார்வை: 1. அரசாணை (நிலை) எண்.47, பள்ளிக்கல்வி சி(2)த்துறை, நாள்.20.03.2013.
2. அரசாணை (1டி) 6T 600T.140, பள்ளிக் கல்வி பக5(1)துறை, நாள்.23.08.2021.
3. பள்ளிக் கல்வி இயக்குநரின் செய்ல்முறை ந.க. எண். 011657 /எல்/இ3/2021, நாள்.13.03.2024.
4. கடித (e file) எண்.6937/ப.க5(1)/2024, நாள்.24.07.2024.
5. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.011657/எல் / இ3/2021, நாள்.02.07.2024.
பார்வை 1-இல் காணும் அரசாணையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக 11 மாவட்டங்களில் கல்வியில் பின்தங்கியுள்ள 26 ஒன்றியங்களில் 26 மாதிரிப் பள்ளிகள், 6 முதல் 12 வகுப்புகள் ஆம் கல்வியாண்டில் தொடங்கிடவும், இம்மாதிரிப் பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 17 ஆசிரியர் மற்றும் 7 ஆசிரியரல்லாத பணியிடங்கள் என 624 பணியிடங்களைத் தோற்றுவித்தும் கொண்ட பள்ளிகளாக, 2013-2014 63 ஆணை வெளியிடப்பட்டது.
பார்வை 2-இல் காணும் அரசாணையில், பார்வை 1-இல் காணும் அரசாணையில் தோற்றுவிக்கப்பட்ட 624 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 01.04.2021 (5 31.03.2024 வரை தற்காலிக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. பார்வை 3 -இல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி 01.04.2024 முதல் 30.06.2024 வரை மூன்று மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பானை (Express Pay Order) வழங்கப்பட்டது. பார்வை 4-இல் காணும் அரசுக் கடிதத்தில் இப்பணியிடங்களுக்கு 01.07.2024 முதல் 30.09.2024 வரை ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டு முடிவடைந்த நிலையில், தற்போது இப்பணியிடங்களுக்கு 01.10.2024 முதல் 31.03.2025 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக்கல்வி அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
இயக்குநர் 2. பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, மேற்குறிப்பிட்டுள்ள 624 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 01.10.2024 முதல் 31.12.2024 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான 01.10.2024 முதல் 31.12.2024 வரை மூன்று மாதங்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 3. இக்கடிதம், அரசாணை (நிலை) எண்.334, நிதி(சம்பளம்)துறை, நாள்.22.10.2024-இல் துறை செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார பகிர்வின்படி வெளியிடப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD 624 Post Pay Authorization From 01.10.2024 To 31.12.2024 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.