விடுமுறை எடுக்காமல் பணியாற்றினால் அரசு ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 1, 2024

விடுமுறை எடுக்காமல் பணியாற்றினால் அரசு ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்



விடுமுறை எடுக்காமல் பணியாற்றினால் அரசு ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்

விடுமுறை எடுக்காமல் பணியாற்றினால்அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு மேல் கூடுதலாக விடுமுறை எடுக்காமல் பணியாற்றினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் கூடுதலாக பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் 10 மாதம் முதல் 15 மாதம் வரை கூடுதலாக பணி செய்வார்கள். இதனால் அரசு நல திட்டங்கள் மிக விரைவில் மக்களுக்கு சென்று அடையும், அரசின் நிதி சுமையும் குறையும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.