மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை EMIS இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான 05.09.2024 அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடுதல் - சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஏதுவாக EMIS இணைய தளம் பதிவேற்றம் செய்திட மூலம் ஆசிரியர்களின் விவரங்கள் EMIS மென்பொருள் உருவாக்குதல் - மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... பள்ளிக் கல்வி இயக்ககம்
அனுப்புநர்,
முனைவர். ச.கண்ணப்பன்,
இயக்குநர்,
பள்ளிக் கல்வி இயக்ககம்,
கல்லூரி சாலை, சென்னை-6
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்,
பெறுநர்,
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,
(மின் அஞ்சல் மூலமாக)
ந.க.எண்.040011/ஐ/இ1/2024
பொருள் : பள்ளிக் கல்வி
—
நாள் 12.07.2024
டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான 05.09.2024 அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடுதல் - சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஏதுவாக EMIS இணைய தளம் விவரங்கள் பதிவேற்றம் செய்திட மூலம் ஆசிரியர்களின் மென்பொருள் உருவாக்குதல் - மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை -
இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் தொடர்பாக. EMIS
பார்வை:
அரசாணை (1டி) எண்.220 பள்ளிக் கல்வி (பொது-II) துறை, நாள் 05.08.2022 கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலை/ தமிழ்நாடு பள்ளிக் உயர்நிலை/ மேல்நிலை/ தனியார் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்/ சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை இவ்விழாவில் சிறந்த ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் ரூ.2,500/- மதிப்பிலான ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசும், வெள்ளிப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படியும் வழங்கப்பட்டு வருகிறது.
பார்வையில் காணும் அரசாணையில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களை தேர்வு செய்திட கீழ்கண்டவாறு 38 வருவாய் மாவட்டத்திற்கான விருதுகள் நிர்ணயம், மாவட்ட / மாநில குழு அமைத்தல், மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள், ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளது. விருது வழங்கிட ஆசிரியர்களைத் தேர்வு செய்திட பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள்.
8. விருதிற்குத் தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தெரிவித்தல் வேண்டும். 9. போதிய ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவிக்காமல், ஆய்வு அலுவலர்கள் தங்கள் பள்ளிகள் பார்வையின் போது கண்டறிந்த சிறந்த ஆசிரியர்களை பள்ளித் தலைமையாசிரியரிடம் அறிவுறுத்தி இணையதளத்தில் பதிவு செய்திடல் வேண்டும்.
10. முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்கள் செயல்பாடுகளை இணையதளத்தில் மதிப்பீடு செய்ய வேண்டும்.
11. விண்ணப்பித்த ஆசிரியர்கள் பணிப்பதிவேடுகள் மற்றும் பிற சான்றுகள் மாவட்ட அளவில் உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட வேண்டும்.
12. விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்டத் தேர்வுக்குழுவின் முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு, மதிப்பீடு செய்தல் வேண்டும். 13. மாவட்டத்தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் கருத்துருக்களை இணையவழியாக மதிப்பீடுகளின் அடிப்படையில் மாநிலத் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
14. மாநிலத் தேர்வுக்குழு மாவட்டக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இறுதி மதிப்பீடு செய்து தகுதியானவர்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகள் (GUIDELINES) 14. அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
15.மாநில பாட திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள் / ஆதிதிராவிட / பழங்குடியினர் நலத்துறை / பிற்பட்டோர் நலத்துறை / சமூக பாதுகாப்புத் துறை / நிதி உதவி பெறும் பள்ளிகள் / ஆங்கிலோ இந்திய பள்ளிகள் மற்றும் அயநிதி / மெட்ரிக் பள்ளிகள் ஆகிய மேலாண்மைகளின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களும் விருதிற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
16.இவ்விருது வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு மட்டுமே கற்பித்தல் ஈடுபடும் வழங்கப்படும். அலுவலகங்களில் பணியில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்ககூடாது. 17. கல்வியாண்டில் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களைப் பரிந்துரை செய்யக்கூடாது. ஆசிரியர்கள் கல்வியாண்டில் குறைந்தது 4 மாதங்கள் (செப்டம்பர் 30ஆம் தேதிவரை -in Regular Service) பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். (மறுநியமன காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது). 18. பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எவ்விதக் குற்றச்சாட்டிற்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராகவும், பொது சேவைகளில் நாட்டம் கொண்டவராகவும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், கல்வித்தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.
19. அரசியலில் பங்கு பெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாகப் பரிந்துரைக்கப்படக் கூடாது.
20.கல்வியினை வணிகரீதியாகக் கருதி செயல்படும் ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இவ்விருதிற்குத் தகுதியற்றவர்களாகக் கருத்தப்பட வேண்டும். 21. சிறந்த முறையில் பணிபுரியும் தமிழாசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களான ஓவிய ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கைத்தொழில் ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத் திறன் ஆசிரியர்களில் தகுதியானவர்களையும் விருதிற்குப் பரிந்துரைக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டும்.
22. பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்களின் கருத்துருக்கள், பெயர்பட்டியலினை மாவட்டத் தேர்வுக்குழுத் தலைவர் தமது சொந்தப் பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்களும் இது தொடர்பாக மந்தணம் காத்திடல் வேண்டும். 23. டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்காக வரையரை செய்யப்பட்ட படிவத்தில் மட்டுமே ஆசிரியர்களின் இணையவழியாக EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டியல் தயார் செய்து 1:2 என்ற வீதத்தில் தேர்வு செய்து, நல்லாசிரியர் விருதிற்கான ஆசிரியர்களின் கருத்துருக்களை இணையதளத்தில் கருத்துருக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
வருவாய் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்து பரிந்துரை செய்யப்படும் பொழுது, அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அனைத்துப் பள்ளிகளையும் உள்ளடக்கியதாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற எந்த ஆசிரியரையும் பரிந்துரை செய்தல் கூடாது.
எனவே எதிர்வரும் 05.09.2024 அன்று நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்திட ஏதுவாக மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாதிரி விண்ணப்பப் படிவத்தினை அடிப்படையாக கொண்டு EMIS இணைய தளம் மூலம் ஆசிரியர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்திட புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய விவரங்கள் இத்துடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை/ தனியார் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்/ சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் விவரங்களை EMIS இணைய தளம் மூலம் 16.07.2024 அன்று முதல் 24.07.2024-க்குள் பதிவேற்றம் செய்ய அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தக்க அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
மாதிரி விண்ணப்ப படிவம் CLICK HERE TO DOWNLOAD DSE - Dr.RK (Good Teacher) Award - Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.