10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மே 13 முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! The director of state planning has ordered special coaching classes and weekly exams from May 13 for students who have not passed the 10th general exam!
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு 13-05-2024 முதல் துணைத் தேர்வு நடைபெறும் நாள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!
பத்திரிக்கை செய்தி குறிப்பு
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககமும் இணைந்து செயல்படுத்தும் தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் மூலம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களை கண்டறிந்து தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் 13/5/2024 முதல் துணைத்தேர்வு நடைபெறும் நாள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. பாடவாரியான ஆசிரிய வல்லுநர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு (MLM) மற்றும் வினாத்தாள் துணைத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இச்சிறப்பு பயிற்சி மையம் மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே நடைபெறும். இச்சிறப்பு பயிற்சி மைய வகுப்புகள் பாடம் சார்ந்த ஆசிரியர்களை கொண்டு சுழற்சி முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும் மற்றும் சனிக்கிழமைகளில் வாராந்திரத் தேர்வு நடத்தவும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளது. இச்சிறப்பு பயிற்சியில் பங்கு பெறும் மாணவர்களின் வருகை பதிவு மற்றும் வாராந்திர தேர்வு மதிப்பெண்கள் கல்வி தகவல் மேலாண்மையின் (EMIS) மூலம் கண்காணிக்கப்பட்டு தொடர்ந்து மாணவர்களை ஊக்குவித்து துணை தேர்வு எழுத அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். உதவி எண் 14417 மூலமாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி உரிய வழிகாட்டுதலுடன் தொடர்ந்து மாணவர்களை சிறப்பு பயிற்சி மையத்தில் கல்வி கற்பதையும், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செய்து மற்றும் துணை தேர்வு எழுதும் வரை ஊக்குவிப்பத்தையும் உறுதி செய்யப்படும்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.