அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்காமல் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உடனடியாக நியமனம் ஒப்புதல் வழங்கிட அரசு கடிதம்..... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 11, 2024

அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்காமல் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உடனடியாக நியமனம் ஒப்புதல் வழங்கிட அரசு கடிதம்.....



அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்காமல் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உடனடியாக நியமனம் ஒப்புதல் வழங்கிட அரசு கடிதம்..... Govt letter to give immediate appointment approval to all categories of teachers who have not been appointed and approved in government aided schools.

பள்ளிக் கல்வி - உதவி பெறும் பள்ளிகள்- அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நியமன ஒப்புதல் அளிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய பிற ஆசிரியர் நியமனங்களுக்கும் நியமன ஒப்பதல் ஒப்பதல் வழங்க வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

காணும் கடிதத்தில் தொடக்ககல்வி இயக்குநர், தூத்துக்குடி மாவட்டம், சரகம், வெங்கடாசலபுரம், புனித ஜார்ஜ் இனிகோ இனிகோ தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை திருமதி T. இருதய அமலி என்பவரின் நியமனம் மாவட்டக் கல்வி அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், மேற்படி ஆசிரியர் தனது நியமனத்திற்கு ஒப்புதல் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு W.P.(MD) No. 32 of 2018ன்மீது 12.01.2018 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையை எதிர்த்து மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு வழக்கு W.A,(MD)No.76 of 2019 ன்படி தாக்கல் செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு வழக்குடன் துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிற மேல்முறையீட்டு வழக்குகள் மற்றும் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிருவாகங்களால் தொடரப்பட்ட வழக்குகள் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு, இவ்வழக்கில் 09.04.2019 அன்று இடைக்கால தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

இத்தீர்ப்பாணையின் அடிப்படையில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களைப் பணிநிரவல் செய்வது தொடர்பாக, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அரசாணை (நிலை) எண் 165 பள்ளிக் கல்வித்துறை நாள். 17.09.2019-ன்படி ஆணையிடப்பட்டது. மேற்படி அரசாணையானது, மேற்படி மேல்முறையீட்டு வழக்கில் 20.09.2019 அன்று பிறப்பிக்கப்பட்ட இடைக்கால ஆணையில், XXX We are fully suspending operation of G.O.(Ms) No. 165, School Education 17.09.2019 until further orders Department dated எனத் தெரிவித்து தீர்ப்பாணையிடப்பட்டது.

இம்மேல்முறையீட்டு வழக்கில் 31.03.2021ல் இறுதி தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டது. மேற்படி தீர்ப்பாணைக்கு எதிராக துறையால் மாண்பமை புதுதில்லி உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு (SLP(c)No.15702/2021) ன்படி தாக்கல் செய்யப்பட்டு, 14.03.2022 அன்று பிறப்பிக்கப்பட்ட இடைக்கால ஆணையில், மேற்படி தீர்ப்பாணையின் பத்தி 95 (i) -க்கு தடையாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், 16.02.2024 அன்று இவ்வழக்கில் இறுதி தீர்ப்பாணையில் Accepting the above submission, this matter is ordered to be closed by relegating the parties to the Madras High Court. It is made clear that the Court should decide the pending matter on merit without being influenced by any observation made by this Court during the pendency of the present proceeding or under the impugned order GT ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு WA(MD) Nos. 320 of 2023-60 தெரிவிக்கப்பட்டுள்ளது. 20.11.2023ல் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையில், கீழ்க்காணுமாறு

36............ Regarding pass in Teachers Eligibility Test as a requisite qualification, the State is empowered to make it as a mandatory qualification for all the State Aided Schools, including Minority Schools, under the Act and Rules in force and pass necessary orders to that effect.

XXXXXXX

40.Therefore, the matter is remitted back to the competent authorities for passing fresh orders. Such an exercise is directed to be completed within a period of twelve weeks from the date of receipt of a copy of this order. The respondents are at liberty to submit fresh representations or documents, if any, in the meanwhile. Consequently, the order passed by the learned Single Judge in W.P. (MD).No.13135 of 2022, dated 02.09.2022 and the impugned order in the Writ proceedings are set aside and the Writ Appeal stands allowed. No costs. Consequently, connected miscellaneous petition is closed. 3. எனவே அனைத்து நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு நியமன ஒப்புதல் அளிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண் 34116/11/84/2013 நாள்.29.03.2023ன்படி ஆணையிடட்டப்பட்டதை தொடர்ந்து தற்போது மேற்படி பள்ளிகளில் உள்ள பிற வகையான ஆசிரியர்கள் நியமனங்களையும் ஏற்பளிப்பது தொடர்பாக, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கு WA(MD)No.s 76 of 2019 etc., batches., ( Irudhaya Amali's Case) ன் மீது 31.03.2021 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையில் பத்தி 95(v)ன்படி தெரிவிக்கப்பட்ட நெறிமுறைகளின்படி நியமன ஒப்புதல் வழங்குவது குறித்து, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றிட செயல்பட உரிய வழிகாட்டுதல் வழங்க தொடக்க்கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

4. மேற்கண்ட தொடக்கக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று, அனைத்து நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் நியமனங்களையும் ஏற்பளிப்பது தொடர்பாக, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கு WA(MD)No. 76 of 2019 etc., batches, ( Irudhaya Amali's Case) ன் மீது 31.03.2021 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையில் பத்தி 95(v) ன் படி தெரிவிக்கப்பட்ட கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நியமன ஒப்புதல் வழங்கலாம் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(i) தனிமேலாண்மையாக (Minority and Non Minority) செயல்படும் ஒரு பள்ளியில் பணியிடம் அனுமதிக்கப்பட்டு (Sanctioned Post), அப்பணியிடம் நிரப்புவதற்கு தகுதியிருந்து, அப்பணியிடத்தினை பள்ளி நிருவாகத்தால் நியமன விதிமுறைகள் (Appointment Procedures) முறையாக கடைபிடிக்கப்பட்டும், கல்வித்தகுதிகள் (TET தேர்ச்சி உட்பட) அனைத்தும் நிறைவு செய்திருக்கும் நிகழ்வில், அந்நியமனத்தினை, நியமன விதிமுறைகளுக்குட்பட்டு ஏற்பளித்திடலாம். (ii) தனிமேலாண்மையாக செயல்படும் ஒரு சிறுபான்மையற்ற (Non Minority) பள்ளியில் பணியிடம் அனுமதிக்கப்பட்டு (Sanctioned Post), அப்பணியிடம் நிரப்புவதற்கு தகுதியிருந்து, அப்பணியிடத்தினை பள்ளி நிருவாகத்தால் நியமன விதிமுறைகள் (Appointment Procedures) முறையாக கடைபிடிக்கப்பட்டும், கல்வித்தகுதிகள் (TET தேர்ச்சி உட்பட) அனைத்தும் நிறைவு செய்திருந்தும், அந்நியமனம் ஒப்புதல் பெறப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், அப்பணியிடம் உபரி என பின்னர் முதலில் அப்பணியிடத்தினை கண்டறியப்பட்டால், நியமன விதிமுறைகளுக்குட்பட்டு ஏற்பளித்து, பின்னர் அந்த உபரி ஆசிரியரை வேறொரு பள்ளியின் தகுதியான காலிப் பணியிடத்திற்கு பணிநிரவல் செய்திடலாம்.

(iii) கூட்டு மேலாண்மையின் (Minority and Non Minority) கீழ் செயல்படும் ஒரு பள்ளியில் பணியிடம் அனுமதிக்கப்பட்டு (Sanctioned Post) அப்பணியிடம் நிரப்புவதற்கு செயல்படும் தகுதியிருந்து, அப்பணியிடத்தினை அம்மேலாண்மையின் கீழ் பள்ளிகளில் உள்ள உபரி ஆசியரைக் கொண்டு நிரப்பப்படாமல், பள்ளி நிருவாகத்தால் நேரடி நியமனம் மூலம் பணியிடம் நிரப்பப்பட்ட நிகழ்வில், அம்மேலாண்மையின் கீழ் உள்ள பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் இல்லை என்பதனை உறுதி செய்து கொண்டு, மேற்படி பள்ளி நிருவாகத்தால் மேற்கொள்ளப்பட்ட நியமனத்தினை, அம்மேலாண்மையால் உபரி ஆசிரியர்கள் சரி செய்யப்பட்ட நாளிலிருந்து நியமன விதிமுறைகளுக்குட்பட்டு, கல்வித் தகுதிகளை சரிபார்த்து (TET தேர்ச்சி உட்பட) ஏற்பளித்திடலாம்.

(iv) கூட்டு மேலாண்மையின் (Minority and Non Minority) கீழ் செயல்படும் ஒரு பள்ளியில் பணியிடம் அனுமதிக்கப்பட்டு (Sanctioned Post) அப்பணியிடம் நிரப்புவதற்கு கல்வி தகுதிகள் (TET தேர்ச்சி உட்பட) இருந்து (உபரி ஆசிரியர்கள் இல்லாதபோது), அப்பணியிடத்தினை பள்ளி நிருவாகத்தால் நிரப்பப்பட்ட பிறகு, ஒப்புதல் பெறப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், அப்பணியிடம் பின்னர் உபரி எனக் கண்டறியப்படும் நிகழ்வில், முதலில் அப்பணியிடத்தினை நியமன விதிமுறைகளுக்குட்பட்டு ஏற்பளித்து, பின்னர் அவ் உபரி ஆசிரியரை அம்மேலாண்மையின் கீழ் உள்ள வேறொரு பள்ளியின் தகுதியான காலிப் பணியிடத்திற்கு பணிநிரவல் செய்திடல் வேண்டும். (v) கூட்டு மேலாண்மைப் (Minority and Non Minority) பள்ளிகளை பொறுத்தவரை வெவ்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் செயல்பட்டாலும், அப்பள்ளிகள் அனைத்தும் ஒரு அலகாகவே கருதப்படல் வேண்டும். இவ்வாறான கூட்டு மேலாண்மைப் பள்ளிகளில் நியமன ஒப்புதல் சார்பான பணிகளை மேற்கொள்ளப்படும் போது அம்மேலாண்மைப் பள்ளிகள் அமைந்துள்ள மாவட்டங்களில் தொடர்புடைய மாவட்டக் அம்மாவட்டத்தில் கல்வி அலுவலர்களிடமிருந்து (தொடக்கக் கல்வி), ஆசிரியர்கள் இன்மைச் சான்றின் அடிப்படையிலேயே விதிகளுக்குட்பட்டு ஏற்பளித்திடல் வேண்டும்.

உபரி தான், நியமன (vi) அரசாணை (நிலை) எண் 165 பள்ளிக் கல்வித்துறை நாள்.17.09.2019-னை சுட்டிக்காட்டி நியமன ஒப்புதல் கோரும் கருத்துருக்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) நிராகரிக்கக் கூடாது.

(vii) நியமன ஒப்புதல் கோரும் கருத்துருக்களை, கீழ்நிலை அலுவலர்கள் எக்காரணம் கொண்டும் குறைகள் கூறி திருப்பி அனுப்பாமல், தகுதி படைத்த (Competent Authority) அலுவலருக்கு உரிய ஆணை பிறப்பிக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். தகுதி படைத்த அலுவலர்களே, அக்கோப்புகள் மீது உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.

(viii) நியமன ஒப்புதல் கோரும் கோப்புகளின் மீது தகுதிபடைத்த அலுவலர்கள் (Competent Authority) நடவடிக்கை எடுக்கும்போது, உபரிப் பணியிடம், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பொறுத்தவரையில் முதன்மைப் பாடங்கள் குறித்த ஆணை, அடிப்படைக் கல்வித்தகுதிகள் மற்றும் பிற நியமனத்திற்கான அடிப்படை விதிகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்க்கும் பட்டியல் (Check List) கொண்டு சரிபார்த்து உரிய ஆணைகள் வழங்க வேண்டும். நிராகரித்து ஆணை வழங்கும் சூழ்நிலையில் விளக்கமான (Descriptive Order) ஆணை வழங்க வேண்டும்.

(ix) மேற்படி நியமன ஒப்புதல் அளிப்பது சார்பாக வழங்கப்பட்ட அறிவுரைகள், அனைத்து வகையான பதவி உயர்வு நியமனங்களுக்கும் பொருந்தும். CLICK HERE TO DOWNLOAD Guidelines of Elementary and Middle School - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.