மாணவர் சீருடைகளை தைக்க Tailorகளை - தலைமை ஆசிரியர் தேர்வு செய்ய உத்தரவு - Director Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 26, 2024

மாணவர் சீருடைகளை தைக்க Tailorகளை - தலைமை ஆசிரியர் தேர்வு செய்ய உத்தரவு - Director Proceedings



மாணவர் சீருடைகளை தைக்க Tailorகளை - தலைமை ஆசிரியர் தேர்வு செய்ய உத்தரவு - Director Proceedings Order to select Tailors for sewing student uniforms - Director Proceedings

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் கடந்த செப்டம்பர் 2022 முதல் நடத்தப்பட்டு , நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பெற்றோர் செயலியில் உள்ளீடு செய்யப்பட்டு வருகிறது . 14.02.2024 வரை பெறப்பட்ட 2,44,234 தீர்மானங்களில் 64,431 தீர்மானங்கள் முடித்துவைக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட மொத்த தீர்மானங்களில 1369 தீர்மானங்கள் துறைசார்ந்த நலத்திட்டங்கள் , குறிப்பாக மாணவர்களின் சீருடை அளவு சார்ந்தது . எனவே , ஒரு முன்மாதிரி முயற்சியாக குறிப்பிட்ட 50 பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான அளவில் சீருடைகள் தைத்து வழங்குவதை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் உறுதிசெய்ய வேண்டும் .

எனவே , பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் முன்னாள் மாணவர்களை தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைத்து இணைப்பு - 1 - இல் கொடுக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட 50 பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தி , கலந்தாலோசித்து மாணவர்களுக்கான சீருடை தைத்தலை சார்ந்த பள்ளிகளே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். மேலும் மாணவர்களுக்கான சீருடைகளை தைப்பதற்குப் பள்ளி மேலாண்மை குழு , முன்னாள் மாணவர்கள் , சுய உதவிக் குழு அல்லது உள்ளூரில் உள்ள தகுதி வாய்ந்த ஒரு தையல் கலைஞரை ( Tailor ) தேர்ந்தெடுக்க வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD Director Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.