Urge the District Elementary Education Officer to take action மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அரசு மற்றும் ஆசிரியர் விரோதப் போக்கை மேற்கொள்ளும் திருநெல்வேலி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதிப்புமிகு இயக்குநர் அவர்கள்,
தொடக்க கல்வித்துறை, பேராசிரியர் அன்பழகனார் நூற்றாண்டு கல்வி வளாகம்,
சென்னை-6.
ஐயா வணக்கம். ஆசிரியர்களின் 60 ஆண்டு கால உரிமையை பறிக்கின்ற வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ கைவிட வலியுறுத்தி தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகிறது. ஆசிரியர்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அரசாணையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்ற நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த அரசாணையின் அடிப்படையில் சேரன்மகாதேவி வட்டாரம் வீரவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தே.லீலா நவரோஜி ஆசிரியர் என்பவர் பாளையங்கோட்டை நகர் மேலப்பாளையம் ஆஷாத் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு கட்டாயப் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மீது நடவடிக்கை PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.