செய்தி வெளியிட்டு எண்:-216
செய்தி வெளியீடு
நாள் : 02.11.2023
நவம்பர் 3-ல் மாநில கற்றல் அடைவு ஆய்வு மாணவர்களுக்கு நடைபெறுதல்
தமிழகத்தில் உள்ள 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாநில கற்றல் அடைவு ஆய்வுத் தேர்வு நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளது.
அதன்படி, சென்னை மாவட்டத்திலுள்ள அரசு/சென்னை/ஆதிதிராவிட/அரசு உதவி பெறும்/தனியார்/ CBSE/KV பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 555 பள்ளிகளில், 963 வகுப்புகளுக்கு, 3,6 மற்றும் 9 வகுப்பு மாணவர்களுக்கு மாநில அடைவு ஆய்வு மொழிப்படம் மற்றும் கணிதப் பாடத்தில் State Educational Achievement Survey (SEAS) 03.11.2023 அன்று நடைபெறுகிறது. இதில் சென்னை மாவட்டத்தில் 28471 மாணவ/மாணவிகள் எழுத உள்ளனர். இத்தேர்வு கண்காணிப்பு பணிக்காக DIET, TTI, B.Ed, M.Ed பயிற்சி மாணவர்கள் 1065 கள ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இதற்கான பயிற்சி வழங்கப்பட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.