ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் : அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 30, 2023

ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் : அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது

ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் : அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய் நல்லூர் அருகே ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்...

திருவெண்ணெய்நல்லூரை அடுத்த பேரங்கியூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 4 பேர் புதன்கி ழமை மதுபோதையில் பள்ளிக்கு வந்தனராம். அவர்கள் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதுடன், அதைக் கண்டித்த ஆசிரியர்கள்,ஆசிரியைகளை தகாத வார்த்தைகளால் பேசிகொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின்பே ரில், திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, 17 வயதுடைய 3 மாணவர்கள், 18 வயதுடைய ஒருவர் என மொத் தம்4 மாணவர்களைக் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.