இணைப்புப் பயிற்சி 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 16.10.2023 அன்று நடைபெறுதல்- இணைப்புப் பயிற்சி பொறுப்பாசிரியர்களுக்கு மீளாய்வு கூட்டம். தொடர்பாக - Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 14, 2023

இணைப்புப் பயிற்சி 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 16.10.2023 அன்று நடைபெறுதல்- இணைப்புப் பயிற்சி பொறுப்பாசிரியர்களுக்கு மீளாய்வு கூட்டம். தொடர்பாக - Proceedings

தூத்துக்குடி மாவட்டக்கல்வி (இடைநிலை) அலுவரின் செயல்முறைகள் - நாள் 12.10.2023

பள்ளிக்கல்வி-தூத்துக்குடி கல்வி மாவட்டம்-இணைப்புப் பயிற்சி 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 16.10.2023 அன்று நடைபெறுதல்- இணைப்புப் பயிற்சி பொறுப்பாசிரியர்களுக்கு மீளாய்வு கூட்டம். தொடர்பாக

ஜீலை 2023 முதல் அரசு / அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் அடிப்படைத் திறன்களில் எழுதுதல் மற்றும் வாசித்தலில் மெல்ல கற்கும் மாணாக்கர்களுக்கு அவர்களது கற்றல் திறன்கள் மேம்பாடு அடையும் வண்ணம் இணைப்புப் பயிற்சி வழங்கும் வகையில் பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு அந்தந்த பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஆங்கிலம் மற்றும் கணிதம் பயிற்சி வழங்கும் பொறுப்பாசிரியர்களுக்கு (ஒரு பள்ளிக்கு ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம்) கீழ்கண்டவாறு மீளாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அரசு / அரசு உதவிபெறும் உயர் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கனவே இணைப்புப் பயிற்சிக்கு பொறுப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்து கூட்டத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

குறிப்பு

மீளாய்வு கூட்டத்திற்கு வரும் ஆங்கிலப்பாட பொறுப்பாசிரியர்கள் ஆங்கில பாடத்தில் முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதவர்கள், ஓரளவுக்கு எழுதப்படிக்க தெரிந்தவர்கள் விவரமும், கணித பாடத்தில் அடிப்படை செயல்பாடுகள் எண்ணிக்கையை ஒரு பிரதி எடுத்துக்கொண்டு வருமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.