'எமிஸ் ஆன்லைன்' தேர்வுக்கு இணையதளம் இடையூறு - மனஉளைச்சலில் ஆசிரியை மரணம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 21, 2023

'எமிஸ் ஆன்லைன்' தேர்வுக்கு இணையதளம் இடையூறு - மனஉளைச்சலில் ஆசிரியை மரணம்!

3ம் வகுப்பு ஆன்லைன் தேர்வுக்கு இணையதளம் இடையூறு - மனஉளைச்சலில் ஆசிரியை மரணம்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகேயுள்ள ஆலம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு, லால்குடி அருகே உள்ள நடராஜபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மனைவி அன்னாள் ஜெய மேரி (52) இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 1999ம் ஆண்டு முதல் 22 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஜெயமேரி 3ம் வகுப்பு மரணவ மாணவியருக்கு ஆசிரியராக உள்ளார். தற்போது மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ‘எமிஸ் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடை பெறுகிறது. இப்பகுதி கிராமங்களில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காத தால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு 'எமிஸ்' டெஸ்ட் நடத்த இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்

இந்நிலையில், அன்னாள் ஜெய மேரி நேற்று மாணவர்களுக்கு 'எமிஸ் ஆன்லைன்' தேர்வு நடத்தியுள்ளார். அப்போது 'நாட் அசஸ்மென்ட்' என்று தகவல் கிடைத்ததால் அருகில் உள்ள பள்ளி ஆசிரியரிடம் இது குறித்து கேட்டுக்கொண்டிருந்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.