தேர்ச்சிப் பகுப்பாய்வுக் கூட்டம் 21.09.2023 முதல் 28.09.2023 வரை - ஆசிரியர்களைத் தேர்ச்சிப் பகுப்பாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தெரிவித்தல் தொடர்பாக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 20, 2023

தேர்ச்சிப் பகுப்பாய்வுக் கூட்டம் 21.09.2023 முதல் 28.09.2023 வரை - ஆசிரியர்களைத் தேர்ச்சிப் பகுப்பாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தெரிவித்தல் தொடர்பாக

திருவண்ணாமலை மாவட்டம் - தேர்ச்சிப் பகுப்பாய்வுக் கூட்டம் 21.09.2023 முதல் 28.09.2023 வரை நடைபெறுதல் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ச்சிப் பகுப்பாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தெரிவித்தல் தொடர்பாக,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி களில் பணிபுரியும் இணைப்பில் கண்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ்க்காண் அட்டவணைப்படி பாடவாரியாக தேர்ச்சிப் பகுப்பாய்வுக் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

மேற்காண் தேர்ச்சிப் பகுப்பாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. எனவே, சார்ந்த ஆசிரியர்களை உரிய நாள்களில் முதல் இடைப்பருவத் தேர்வு தேர்ச்சி முடிவுடகள் மற்றும் இதர தேர்வுகளில் மாணவர்களின் முன்னேற்ற அறிக்கையுடன் தேர்ச்சிப் பகுப்பாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தக்க வகையில் பணிவிடுவிப்பு செய்திடுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு:

பட்டியலில் உள்ள ஆசிரியர்களில் பணி மாறுதல் மூலம் உள் மாவட்டத்திற்குள் வேறு பள்ளிக்கு சென்றிருந்தால் அப்பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்து ஆசிரியரை கூட்டத்தில் கலந்து கொள்ளத் தெரிவிக்க வேண்டும்.

2. பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியாமல் வேறு பள்ளிக்கு மாறுதல் சென்றிருந்தால் தற்போது அந்த பாடத்தை போதிக்கும் ஆசிரியர் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.