சட்டப்பேரவைக் கூடும் நாளில் ஆர்ப்பாட்டம்: CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 24, 2023

சட்டப்பேரவைக் கூடும் நாளில் ஆர்ப்பாட்டம்: CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

சட்டப்பேரவைக் கூடும் நாளில் ஆர்ப்பாட்டம்: சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் அக்.9-ஆம் தேதி காதில் பூசுற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்தது.

இதுகுறித்து திண்டுக்கல்லில் சனிக்கிழமை சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் கூறியதாவது:

திமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதி எண் 309-இன் படி, புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை நூறு சதவீதம் நிறை வேற்றிவிட்டதாக முதல்வர் முக.ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் அக்.9-ஆம் தேதி, மாநிலம் முழுவதும் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில், காதில் பூவைச் சுற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.