பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எப்போது? - வெளியானது அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 28, 2023

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எப்போது? - வெளியானது அறிவிப்பு



பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் விடுமுறை தேதிகள் வெளியீடு;

1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.14ம் தேதியும், 6-10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.18ம் தேதியும் தேர்வுகள் துவங்க உள்ளது.

11-12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.15ம் தேதி துவங்க உள்ளது.

1-3ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.22ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிப்பு.

4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிப்பு.

அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

11, 12 ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ந்தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ந்தேதியும் காலாண்டு தேர்வுகள் துவங்கும், செப்டம்பர் 27 அன்று காலாண்டு தேர்வு முடிவடைகிறது.

தேர்வு முடிந்த பின்னர் செப்டம்பர் 28 ந்தேதி முதல் அக்டோபர் 2 வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ந்தேதி பள்ளிகள் திறக்கும் என்று பள்ளிக்கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.