நாளை ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ள 5 மாவட்டங்கள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 28, 2023

நாளை ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ள 5 மாவட்டங்கள்!

ஆக.,29-ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.



ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்திற்கு வரும் ஆக. 29 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

ஓணம் பண்டிகையையொட்டி 29-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஓணம் பண்டிகையையொட்டி, வருகிற 29-ந் தேதி கோவை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக இந்த அலுவலகங்கள் அடுத்த மாதம் 2-ந்தேதி (சனிக்கிழமை) முழு பணி நாளாக செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓணம்: ஆக.29-இல் உள்ளூர் விடுமுறை

ஓணம் பண் டிகையை முன்னிட்டு, ஆக.29- ஆம் தேதி சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அ ருணா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு ஆணைப்படி அறிவிக் கப்பட்டுள்ள இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக செப்.2- ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங் கள், கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகி றது.

இருப்பினும், உள்ளூர் விடுமு றைநாளான ஆக.29-ஆம் தேதி அவசர அலுவல்களைக் கவ னிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆக.29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

ஆக.29ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய செப்.16ஆம் தேதி பணி நாள் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவிப்பு



கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகை தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு

விடுமுறையை ஈடுசெய்ய செப்டம்பர் 29ம் தேதி வேலை நாள் எனவும் அறிவிப்பு



திருப்பூர்

ஓணம் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை ஒட்டி மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு

விடுமுறையை ஈடுசெய்ய செப்.9ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.