புகழ்ப் பெற்ற பல்கலைக் கழகங்களில் உயர்க் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL, IELTS, GRE, GMAT போன்ற தகுதித் தேர்விற்கு இளைஞர்களுக்கு பயிற்சிகள் - செய்தி வெளியிட்டு எண்:161 நாள்: 25.08.2023
செய்தி வெளியிட்டு எண்:161
நாள்: 25.08.2023
தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தைச் சார்ந்தவர்கள் அயல்நாடு சென்று புகழ்ப் பெற்ற பல்கலைக் கழகங்களில் உயர்க் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL, IELTS, GRE, GMAT போன்ற தகுதித் தேர்விற்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி மு. அருணா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார் தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவர்கள் அயல்நாடு சென்று புகழ்ப் பெற்ற பல்கலைக் கழகங்களில் உயர்க் கல்வி பயில அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL, IELTS . GRE, GMAT போன்ற தகுதித் தேர்விற்கு பயிற்சிஅளிக்கப்பட உள்ளது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மற்றும் மேலாண்மை (Engineering and Management), தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல் ( Pure Science and Applied Science), வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் (Agricultural Science and Medicine) சர்வதேச வர்த்தகம், பொருளதார, கணக்கியல் நிதி.( International Commerce, Economic, Accounting Finance), மனிதநேயம், சமூக அறிவியல். நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல், (Humanities, Social Science, Fine Arts, Law and Arts and Science) போன்ற படிப்புகளை அயல் நாடுகளில் பயில விரும்புவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம்ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள்இருக்கவேண்டும்இப்பயிற்சிக்கானசெலவீனம் தாட்கோவால் வழங்கப்படும் இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணாக்கர்கள் தாம் விரும்பும் அயல் நாடுகளிலுள்ள கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பினை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம் இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி மு. அருணா.இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:-
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,
சென்னை மாவட்டம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.