"ஏப்ரல் 29 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை"
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
"ஏப்ரல் 10-28ம் தேதிக்குள் 4-9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும்"
ஏப்ரல் 17-21ம் தேதிக்குள் 1-3ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வை முடிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை Instructions regards Annual exams
பள்ளிக் கல்வி - 2022-2023 ஆம் கல்வியாண்டு - 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல்-சார்பு.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்,நாள்: 06.04.2023
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டு அரசுப் பொதுத் தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மூன்றாம் பருவம்/ ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
@kalviseithi பார்வை-1ல் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு 17.04.2023 முதல் 21.04.2023 வரையும், பார்வை-2ல் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு மாவட்டங்கள் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மாவட்டங்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இம் மாத இறுதியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில், ஆசிரியர், பெற்றோர்களிடம் அவர்தம் குழந்தைகளின் வருகை, கற்றல்நிலை, உடல்நலம், மனநலம், கல்வி இணைச் செயல்பாடுகள், கல்விசாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன், கற்றல் அடைவு சார்ந்த நடவடிக்கைகள் குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும். மேலும், பள்ளிக் கடைசி வேலை நாளாக 28.04.2023 எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
"ஏப்ரல் 10-28ம் தேதிக்குள் 4-9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும்"
ஏப்ரல் 17-21ம் தேதிக்குள் 1-3ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வை முடிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை Instructions regards Annual exams
பள்ளிக் கல்வி - 2022-2023 ஆம் கல்வியாண்டு - 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல்-சார்பு.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்,நாள்: 06.04.2023
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டு அரசுப் பொதுத் தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மூன்றாம் பருவம்/ ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
@kalviseithi பார்வை-1ல் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு 17.04.2023 முதல் 21.04.2023 வரையும், பார்வை-2ல் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு மாவட்டங்கள் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மாவட்டங்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இம் மாத இறுதியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில், ஆசிரியர், பெற்றோர்களிடம் அவர்தம் குழந்தைகளின் வருகை, கற்றல்நிலை, உடல்நலம், மனநலம், கல்வி இணைச் செயல்பாடுகள், கல்விசாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன், கற்றல் அடைவு சார்ந்த நடவடிக்கைகள் குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும். மேலும், பள்ளிக் கடைசி வேலை நாளாக 28.04.2023 எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.