மாநகராட்சி உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 1, 2023

மாநகராட்சி உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

மாநகராட்சி உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

மதுரை, ஏப்.1- மதுரை மாநகராட்சியில் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் உணவு சமைக்கும் மையங் களுக்கு ஆசிரியர்கள் காலை 6:00 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டும் என்ற கமிஷனரின் உத்தரவுக்கு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:

தமிழக அரசின் காலை சிற்றுண்டி உணவு மாநகராட்சியில் 26 தொடக்க, 14 நடு நிலை பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக உணவு சமைக்கும் மையங்களுக்கு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை காலை 6:00 மணிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது அரசு விதிகளுக்கு எதிரானது. இத்திட்டத்திற்காக தினம் உணவு வழங்குவ உ தற்கு முன்சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மேலாண்மை குழு உறுப்பினர், தலைமையாசிரியர், ஆசிரியர் அல்லது பெற்றோர் ஆகியோரில் யாராவது ஒரு வர் உணவை சுவைத்து நல்ல நிலையில் இருப் பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.