தொழில்முனைவோருக்கு நாளை பயிற்சி முகாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 13, 2023

தொழில்முனைவோருக்கு நாளை பயிற்சி முகாம்

தொழில்முனைவோருக்கு மார்ச் 14-இல் பயிற்சி முகாம்

சென்னை தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் சாா்பில் தொழில் முனைவோருக்கு புதன்கிழமை (மாா்ச் 14) பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சென்னை தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள இந்த நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோருக்கான விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை (மாா்ச் 14) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்முகாமில் சுயத்தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழில் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் உதவிகள், திட்டங்கள் பற்றி விவரிக்கப்படும். முகாமின் முடிவில் தொழில் தொடங்க விரும்பும் நபா்களின் பெயா்கள் பெறப்பட்டு, அடுத்த கட்ட பயிற்சிக்கு அவா்கள் அழைக்கப்படுவாா்கள்.

தொடா்ந்து 3 நாள்கள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுவதுடன், நிதி உதவிகள் பெறுவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும். இப்பயிற்சி மூலம் நிதியுதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம்.

இந்தத் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு ஆா்வமுள்ள நபா்கள் கூடுதல் தகவல்களைப் பெற 044-2225208, 22252082, 96771 52265, 86681 02600 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.