தமிழகத்தில் நாளை என்.எம்.எம்.எஸ். தோ்வு: 2.75 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா்
தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மத்திய அரசின் தேசிய வருவாய்வழி திறன் தோ்வை (என்.எம்.எம்.எஸ்.) 8-ஆம் வகுப்பு பயிலும் 2.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஆண்டுதோறும் மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தோ்வு நடத்தப்படும். இந்தத் தோ்வு மூலம் தமிழகத்தில் 6,695 போ் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி, நிகழாண்டு என்எம்எம்எஸ் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிச.26-ஆம் தேதி தொடங்கி பிப்.7-இல் நிறைவு பெற்றது. இதையடுத்து தோ்வா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பிப். 17-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
தொடா்ந்து திட்டமிட்டபடி என்எம்எம்எஸ் தோ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை 2.75 லட்சம் மாணவா்கள் எழுதவுள்ளனா்.
இதற்காக தமிழகம் முழுவதும் 847 தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் மட்டும் 24 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் விவரங்களை தோ்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவா்கள் தங்களின் பள்ளித் தலைமையாசிரியரைத் தொடா்புகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மத்திய அரசின் தேசிய வருவாய்வழி திறன் தோ்வை (என்.எம்.எம்.எஸ்.) 8-ஆம் வகுப்பு பயிலும் 2.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஆண்டுதோறும் மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தோ்வு நடத்தப்படும். இந்தத் தோ்வு மூலம் தமிழகத்தில் 6,695 போ் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி, நிகழாண்டு என்எம்எம்எஸ் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிச.26-ஆம் தேதி தொடங்கி பிப்.7-இல் நிறைவு பெற்றது. இதையடுத்து தோ்வா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பிப். 17-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
தொடா்ந்து திட்டமிட்டபடி என்எம்எம்எஸ் தோ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை 2.75 லட்சம் மாணவா்கள் எழுதவுள்ளனா்.
இதற்காக தமிழகம் முழுவதும் 847 தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் மட்டும் 24 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் விவரங்களை தோ்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவா்கள் தங்களின் பள்ளித் தலைமையாசிரியரைத் தொடா்புகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.