கனமழை காரணமாக (04.11.22) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 3, 2022

கனமழை காரணமாக (04.11.22) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

கனமழை காரணமாக இன்று (04-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்

1.சென்னை (பள்ளி, கல்லூரிகள்)
2.திருவள்ளூர் (பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர் தாலுக்கா மட்டும் பள்ளிகள்)
3.காஞ்சிபுரம் (குன்றத்தூர் தாலுக்கா பள்ளி, கல்லூரிகள்)
4.மயிலாடுதுறை (பள்ளி, கல்லூரிகள்)
5.திருவாரூர் (பள்ளி, கல்லூரிகள்)
6.தஞ்சாவூர் (பள்ளிகள்)
7.நாகை (பள்ளிகள்) கனமழை காரணமாக (04.11.22) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

தொடா் மழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. கடந்த இரண்டு நாள்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தொிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.