தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் தொடக்கம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 20, 2022

தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் தொடக்கம்!


செய்தி வெளியீடு எண்:1835

செய்தி வெளியீடு

நாள்:20.10.2022

தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான நவீன மேசை கணினிகள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.10.2022) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு அவர்கள் முன்னிலையில், தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான நவீன மேசை கணினிகள் வழங்கிடும் அடையாளமாக 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நவீன கணினிகள், பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லையும் வழங்கினார். மேசை அதனைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தை தொடங்கிடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் நவீன மேசை கணினி, பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் வழங்கினார். அமைச்சர் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ -சேவை மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராமப்புற வறுமை ஒழிப்பு குழுக்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை, கிராமப்புற தொழில் முனைவோர் மற்றும் கண்டோன்மெண்ட் போர்டு மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்தின் அருகாமையிலேயே வழங்குகின்றன. இதனை மேம்படுத்தும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்களை தொடங்கி மக்கள் இணைய வழி சேவைகளை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசால் கடந்த ஆண்டு முதன் முறையாக காகிதமில்லா சட்டமன்றக் கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. அதற்கென சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நவீன மேசைக் கணினிகள் வழங்கப்பட்டன. சட்டமன்ற பேரவைச் செயலகத் துறை சார்பாக மாநிலத்தின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் அமைப்பதற்காக அந்நவீன மேசை கணினிகள் வழங்கப்படுகின்றன.

இக்கணினிகளை பயன்படுத்தி இ-சேவை வலைத்தளத்திலிருந்து (tnesevai.tn.gov.in/Default.aspx) இணைய வழி சேவைகளை மக்களுக்கு வழங்க 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான நவீன மேசை கணினிகளை வழங்கிடும் அடையாளமாக மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு. கு. பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கு. செல்வப்பெருந்தகை, திரு.ஜி.கே. மணி, திரு. ம. சிந்தனை செல்வன், டாக்டர் தி. சதன் திருமலைக்குமார், திரு.எம்.எச். ஜவாஹிருல்லா, திரு.ஈ.ஆர். ஈஸ்வரன், திரு. தி. வேல்முருகன் ஆகியோருக்கு மேசை கணினிகளையும், பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் நீரஜ் மித்தல், இ.ஆ.ப., தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலர் திரு. பிரவீன் பி. நாயர், இ.ஆ.ப., சட்டப்பேரவைச் செயலாளர் திரு. கி. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.