பிளஸ் 1 துணைத் தோ்வு: நாளை விடைத்தாள் நகல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 7, 2022

பிளஸ் 1 துணைத் தோ்வு: நாளை விடைத்தாள் நகல்

பிளஸ் 1 துணைத் தோ்வு விடைத்தாள் நகல்கள் வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்வுத்துறை இயக்குநா் சா.சேதுராமவா்மா வெளியிட்ட அறிவிப்பு:

பிளஸ் 1 துணைத்தோ்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்த தோ்வு எழுதியவா்களில் விடைத்தாள் கோரி விண்ணப்பித்தவா்களின் நகல்கள் வெள்ளிக்கிழமை மதியம் (செப்.9) வெளியிடப்பட உள்ளது. இவற்றை மாணவா்கள் தோ்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

அதன்பின்னா் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் அதற்கான விண்ணப்பங்களை மேற்கண்ட இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை 2 நகல்கள் எடுத்து செப்டம்பா் 12, 13-ஆம் தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட தோ்வுத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும், மறுமதிப்பீடுக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போா் உயிரியல் பாடத்துக்கு ரூ.305, இதர பாடங்களுக்கு ரூ.205 கட்டணமாக செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.