பள்ளியில் அடுத்தடுத்து அதிர்ச்சி...மாடியில் இருந்து குதித்த மாணவி...விஷம் குடித்த மாணவன் - விசாரணையில் பகீர் தகவல்
சிவகங்கை அருகே உள்ள திருப்புவனம் அரசு பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவி கையில் நரம்பை அறுத்துக் கொண்டும், பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதே பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வரும் மாணவர் ஒருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விசாரணையில் மாணவனும், மாணவியும் காதலித்து வந்ததும் இந்த விவகாரம் இருதரப்பு வீட்டிலும் தெரியவரவே பெற்றோர் கண்டித்ததால் இந்த முடிவில் ஈடுபட்டதும் உறுதியானது.
சிவகங்கை அருகே உள்ள திருப்புவனம் அரசு பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவி கையில் நரம்பை அறுத்துக் கொண்டும், பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதே பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வரும் மாணவர் ஒருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விசாரணையில் மாணவனும், மாணவியும் காதலித்து வந்ததும் இந்த விவகாரம் இருதரப்பு வீட்டிலும் தெரியவரவே பெற்றோர் கண்டித்ததால் இந்த முடிவில் ஈடுபட்டதும் உறுதியானது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.