சிறுபான்மையினருக்கு விலையில்லா தையல் இயந்திரம்
கோவை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின்போது, சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்குவது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா், பாா்சி, ஜெயின் உள்ளிட்ட சமூகங்களைச் சோ்ந்த பயனாளிகள் விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தையல் கலை பயின்றவராகவும், அதற்கான சான்றிதழும் வைத்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின்போது, சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்குவது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா், பாா்சி, ஜெயின் உள்ளிட்ட சமூகங்களைச் சோ்ந்த பயனாளிகள் விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தையல் கலை பயின்றவராகவும், அதற்கான சான்றிதழும் வைத்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.