கல்வித்துறை அதிரடி.. ஆசிரியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 25, 2022

கல்வித்துறை அதிரடி.. ஆசிரியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி

வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் வருகைப்பதிவு செயலி வாயிலாக மட்டுமே நடக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் இதுவரை தங்கள் வருகைப் பதிவை, பதிவேடு மூலம் குறித்து வருகின்றனர். ஆனால், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்வித்துறை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்க திட்டமிட்டுள்ளது. ஆசிரியர்கள், மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலகங்களில் இருக்கக்கூடிய ஊழியர்கள் ஆகிய அனைவரும், "எமிஸ்" என்கிற பிரத்தியேக செயலியில் காலை 10 மணிக்குள் வருகையை பதிவு செய்யவில்லை என்றால், அன்றைய நாள் சம்பளம் கிடைக்காமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாத கடைசியில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த விவகாரம் தற்பொழுது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.