மே 20 வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 13, 2022

மே 20 வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர உத்தரவு

மே 20 வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 வகுப்பு முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. அதேசமயம் பிளஸ் 1 வகுப்புகளுக்கு ஜூன் 24- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மே 20 வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 வகுப்பு முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படும் நிலையில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.