கனமழை எதிரொலி; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு... எங்கெல்லாம் தெரியுமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 8, 2024

கனமழை எதிரொலி; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு... எங்கெல்லாம் தெரியுமா?



கனமழை எதிரொலி; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு... எங்கெல்லாம் தெரியுமா?

School Holiday | கனமழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜனவரி 09) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்: 10.01.2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும். 11.01.2024 முதல் 13.01.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (ஜனவரி 09) விடுமுறை அளித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி காரைக்காலில் மாவட்டத்தில் இயங்கும் தனியார், அரசு பள்ளிகளுக்கு இன்று (ஜனவரி 9) விடுமுறை அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.