அரசு பள்ளிகளில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலி 18,107 teacher vacancies in government schools.
ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி, அரசு பள்ளிகளில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பணி
கல்வி என்பது வெறும் ஏட்டுச்சுரைக் காய் மட்டுமல்ல; அது ஒரு மனிதனை பண்படுத்துகின்ற, சிந்திக்க வைக்கின்ற உன்னத கருவி. அத்தகைய கல்வியை மாணவர்களுக்கு பாலமாக ஆசிரியர்கள் னர் வெறும் பாடப்புத்தக தாண்டி, ஒழுக்கம், சமூகப் ஆளுமைத்திறன் மற்றும் மாணவர்களிடம் விதைக்கும் ணியே ஆசிரியர் பணியாகும்.
அதனால்தான், உலகில் உள்ள அனைத்துத் தொழில்களுக்கும் தாய்த் தொழிலாக, மற்ற அனைத்துத் துறை யினரையும் உருவாக்கும் உன்னதத்து றையாக ஆசிரியர் பணி போற்றப்படுகிறது. ஒரு நாட்டின் முன்னேற்றமும், அதன் மனிதவள மேம்பாடும் வகுப்ப றைகளில் இருந்தே தொடங்குகின்றன என்பதை உணர்த்துவதே இப்பணியின் முதன்மை நோக்கமாகும்.
18,107 இடங்கள் காலி
அப்படி இருக்கும் ஆசிரியர் பணி களில் காலி இடங்கள் அரசு பள்ளிக் கூடங்களில் தொடர்ந்து நீடித்து வரு வதைபார்க்கமுடிகிறது. அந்தவகையில் ஜூன் மாதம் 11-ந்தேதி வரையிலான கொண்டுசேர்க்கும் நிலவரப்படி ஒப்பளிக்கப்பட்ட இடங்க விளங்குகின்றனளின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயி அறிவைத்ரத்து 248 ஆக இருக்கும் நிலையில், பொறுப்பு, அதில் 96 ஆயிரத்து 141 இடங்கள் நிரப் நற்பண்புகளை பப்பட்டு, 18 ஆயிரத்து 107 இடங்கள் அறப்பது காலியாக இருப்பது பள்ளிக்கல்வித் அதுறையின் புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது.
இந்த புள்ளி விவரங்களில் அதிகபட்சமாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்தான் இருக்கின்றன. அதில் 7.252 இடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
அதற்கடுத்தபடியாக 2,833 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பள்ளியை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 1,214 என்றஎண்ணிக்கையில் காலியாக இருக் கிறது. அதிகபட்சமாக திருவண்ணா மலை மாவட்டத்தில் 93 என்ற எண்ணிக் கையில் காலி இடங்கள் இருக்கின்றன.
கவனம் செலுத்த வேண்டும்
குறிப்பிட்ட பாடத்திற்கு ஆசிரியர் கள் இல்லாதபோது, மாணவர்கள் அந் தப் பாடத்தின் அடிப்படைத் தத்துவங் களைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறுவார்கள்.
காலியாக உள்ள பணி யிடங்களால், பணியில் இருக்கும் மற்ற ஆசிரியர்கள் கூடுதல் வகுப்புகளையும், பிற பாடங்களையும் கவனிக்க வேண் டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு மன அழுத்தமும், பணிச் சுமையும் கூடும். எனவே பள்ளிக்கல் வித்துறை இதில் தீவிர கவனம் செலுத்தி காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது கல்வியாளர்கள், ஆசிரியர் சங் கங்கள். பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது
Monday, June 22, 2026
New
அரசு பள்ளிகளில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலி
government vacancies
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.