மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வா? பள்ளிக் கல்வி ஆணையர் விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 8 مارس 2023

மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வா? பள்ளிக் கல்வி ஆணையர் விளக்கம்

மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வா? பள்ளிக் கல்வி ஆணையர் விளக்கம்

சென்னை,மார்ச் 7: அரசுப்பள்ளிகளில்பயிலும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற் காக அடிப்படை மதிப்பீட்டுத் தேர்வு திட்ட மிடப்பட்ட நிலையில், அந்தத் தேர்வு நுழை வுத் தேர்வு என தவறாக புரிந்து கொள்ளப்பட் டது என்று தமிழக பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசுப்பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் ஆர்வமும், திற மையும் உடைய மாணவர்களை தொடர்ச்சி யாக பயிற்றுவிக்கவும், தேவையான உதவிக ளைச் செய்யவும், அந்த மாணவர்கள் விருப் பப்படும் உயர்கல்வி நிறுவனங்களைச் சென் றடையும் வரை நீடித்த தொடர் கவனிப்பு- வழிகாட்டுதல் வழங்கவும் மாணவர்களுக்கு அடிப்படை மதிப்பீடு (பேஸ்லைன் சர்வே) நடத்தத் திட்டமிடப்பட்டது.

இந்தச் செய்தி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்த இருப்பதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு நுழை வுத்தேர்வு குறித்து தன்னுடைய நிலைப் பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள் ளது.

அந்தநிலைப்பாட்டில் தற்போதும் எவ் வித மாற்றமும் இல்லை. தமிழகத்தில் உள்ள செம்மைப் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பயி லும் மாணவர்களும் அவர்தம் விருப்பத்துக் கும் திறமைக்கும் ஏற்ப உயர்கல்வி பயில்வ தற்கான வாய்ப்பை பள்ளிக் கல்வித் துறை தொடர்ந்து வழங்கும் எனத் தெரிவித்துள் ளார் அவர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.