தொழில்முனைவோர் பயிற்சியில் 22 ஆயிரம் யோசனை வழங்கிய பள்ளி மாணவர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 8 مارس 2023

தொழில்முனைவோர் பயிற்சியில் 22 ஆயிரம் யோசனை வழங்கிய பள்ளி மாணவர்கள்

தொழில்முனைவோர் பயிற்சியில் 22 ஆயிரம் யோசனை வழங்கிய பள்ளி மாணவர்கள்

இந்திய சிறு, நடுத்தர நிறுவனங் களின் மன்றம் (எஸ்எம்இ) சார்பில் இந்தியாவில் சிறந்த விற்பனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தொழில் முனைவோர் மேம்பாடுமற் றும்புத்தாக்கநிறுவனத்தின்இயக்கு நர் ஜெ.யு.சந்திரகலா 13 தொழில் முனைவோருக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசின் சார்பில், பள்ளி மாணவர் களுக்கு தொழில்முனைவோர் குறித்து அறிந்துகொள்ளும் வகை யில் ‘பள்ளி புத்தாக்க வளர்ச்சி திட்டம்' கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'யுனிசெப்'புடன் இணைந்து திறன்போட்டி பயிற்சி கள் நடத்தப்பட்டன.

இப்பயிற்சியில், சுற்றுவட்டாரத் தில் நிகழும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அதற்கு புதுமையான யோசனையுடன் தீர்வுகாண வேண் டும்.

அந்த வகையில் இதுவரை 22 ஆயிரம் புதுமையான யோசனை கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து 40 மாணவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு அவர்களுக்கு புது மையான யோசனைகளுக்காக பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் அமேசான் நிறு வனத்தின் ஊதிய வெகுமதிகள் மற்றும் வணிக சேவைகள் பிரிவு இயக்குநர் கிரிஷ் கிருஷ்ணன், இந்திய எஸ்எம்இ தலைவர் பிரஹ லாத் கக்கர், அகில இந்திய வியா பாரிகள் மன்றத்தின் தலைவர் கிருஷ்ணா குப்தா பங்கேற்றனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.