தலைமை ஆசிரியர்கள் வெளிநாடு சென்றதில் முறைகேடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 14 فبراير 2023

தலைமை ஆசிரியர்கள் வெளிநாடு சென்றதில் முறைகேடு

தலைமை ஆசிரியர்கள் வெளிநாடு சென்றதில் முறைகேடு Irregularity in head teachers going abroad



தலைமை ஆசிரியர்கள் வெளிநாடு சென்றதில் முறைகேடு: முதல்வருக்கு கவர்னர் கடிதம்

பஞ்சாப்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கருத்திரங்கிற்காக சிங்கப்பூர் சென்ற விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அம்மாநில கவர்னர் , முதல்வர் பகவந்த்சின் மானிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாப் மாநில அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கருத்தரங்கில் பங்கேற்பதாக அரசு செலவில் சிங்கப்பூர் செல்ல தேர்வு செய்யப்பட்டு, கடந்த பிப் 6 முதல் 10-ம் தேதி வரை இவர்கள் சிங்கப்பூரில் கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.

இந்நிலையில் தலைமை ஆசிரியர்கள் தேர்வில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், முறைகேடு நடந்ததாகவும், புகார் எழுந்தது. இது குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முதல்வர் பகவந்த்சின் மானுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல நடந்த தேர்வு குறித்து முதல்வர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.