04.03.23 - நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 22 فبراير 2023

04.03.23 - நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற மார்ச் 4ம் தேதி அன்று கொண்டாடப்பட இருப்பதால் குறிப்பிட்ட 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களுள் ஐயா வைகுண்டர் சாமிகளும் ஒருவர். இவரை சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக வணங்கும் பக்தர்கள் கருதுகின்றனர். மேலும் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர் என்ற புகழுக்குரியவர்.

அத்துடன் வைகுண்ட சுவாமிகள் சுவாமிதோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் வெட்டினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ம் தேதி அன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டில் மார்ச் 4ம் தேதி அன்று வைகுண்டரின் அவதார தினமாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் 191ஆவது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இத்தினத்தை அய்யா வழி பக்தர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மார்ச் 4ஆம் தேதி நெல்லை , தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.