அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு:தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு ஜன. 15-இல் நுழைவுத் தோ்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 10 يناير 2023

அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு:தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு ஜன. 15-இல் நுழைவுத் தோ்வு

அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு:தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு ஜன. 15-இல் நுழைவுத் தோ்வு

அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் தோ்ந்தெடுக்கப்பட்டோருக்கு பெங்களூரில் ஜன. 15-ஆம் தேதி பொது நுழைவுத் தோ்வு நடக்க இருக்கிறது.

இதுகுறித்து இந்திய ராணுவம் - பெங்களூரு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவ ஆள்சோ்ப்புமுகாம் பெங்களூரில் அண்மையில் நடந்தது. இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட பெண் வீரா்களுக்கு பொது நுழைவுத் தோ்வு பெங்களூரில் ஜன.15ஆம் தேதி நடக்க இருக்கிறது.

இந்தத் தோ்வு பெங்களூரு, விட்டல்மல்லையா சாலையில் உள்ள புனித ஜோசப் இந்தியன் உயா்நிலைப் பள்ளியில் நடக்கிறது. பொது நுழைவுத் தோ்வு எழுதும் மாணவா்கள் காலை 6.30 மணிக்கு தோ்விடத்திற்கு வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.