100 சதவீத மானியத்தில் குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்திட வேளாண்மை பொறியியல்துறை மூலம் விண்ணப்பிக்கலாம்! - மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 26 ديسمبر 2022

100 சதவீத மானியத்தில் குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்திட வேளாண்மை பொறியியல்துறை மூலம் விண்ணப்பிக்கலாம்! - மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்!!

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்திட வேளாண்மை பொறியியல்துறை மூலம் விண்ணப்பிக்கலாம்! - மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்!!

தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதியதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண் டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சத வீத மானியத்தில் ஆழ் துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்திட 2021. 22 ஆம் ஆண்டில் ரூபாய் 12 கோடி செலவில் மின் மோட்டார் உடன் நுண்ணீர் பாசன அமைத்து தரநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் பாசன நீர் வசதி இல்லாத இடங்க ளில் 200 சிறு குறு விவசா யிகள் பயன்பெறும் வகை யில் நிலத்தடி நீர் பாதுகாப்பான குறு வட் டங்களில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட ஆணையிடப்பட் டுள்ளது. வசதி அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து மாவட்டங்களி லும் உள்ள ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெ றும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினரால் அனைத்து கிராம அண்ணா மறும் லர்ச்சி திட்டத்தின் கீழ் 2021 2022 ஆம் ஆண்டு பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட 1997 ஊராட்சி கிராமங்களில் உள்ள பாதுகாப்பான குரு வட்டங்களில் திட்டம் சாகுபடி செயல்படுத்தப்படும். மேலும் இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு வரு வாய்த் துறையின் மூலம் வழங்கப்பட்டசாதிசான்று பெறப்பட வேண்டும் சாத் தியமுள்ள இடங்களில் சூரிய சக்தி மூலம் இயக் கப்படும் பம்பு செட் அதி கபட்சம் 10 குதிரைத்திறன் திறன் வரை அமைத்திட வேண் டும்.

கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் அரியலூர்ரிஷிவந் தியம் வடபொன்பரப்பி திருக்கோவிலூர் திருநா வலூர் மற்றும் வெள்ளி மலை ஆகிய ஆறு பாது காப்பான குரு வட்டங்கள் உள்ளன பாதுகாப்பான ஒரு வட்டங்களில் உள்ள பயனாளிகள் விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியி யல் துறையின் செயற்பொ றியாளர் உதவி செயற்பொ றியாளர் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் அலுவலகங்களை அணுக லாம் இத்திட்டத்தின் கீழ் இடத்திற்கு ஏற்றவாறு குழாய் கிணறு அல்லது ஆழ்துளைகிணறு அமைத் தல் நீர் இணை இறப்ப தற்கு மின்சார சக்தி மூலம் சூரிய சக்தி மூலம் இயங் கக்கூடிய பம்பு செட்டு களை நிறுவுதல் பாசன நீரினை வீணாக்காமல் செய்யப்படும்

வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறு வுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணி கள் மேற்கொள்ளப்படுகி றது இத்திட்டம் பிரதமர் மந்திரி நீர் பாசன திட்டம் ஒவ்வொருவயலுக்கும்நீர் நிலத்தடி நீரைபாசனத்திட் டத்தின் வழிகாட்டு நெறி முறைகளின் படி செயல்ப டுத்தப்படும். அரசினால் நிர்ணயிக்க ப்பட்ட ஆழத்திற்கும் அதி கமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத் கூ கொண்ட பம்பு செட்டுகள் நிறுவ வேண் டும் என்றாலோஅதற்கான கூடுதல் செலவினை சம் பந்தப்பட்ட விவசாயி களோ ஏற்றுக்கொள்ள வேண்டும் சிறு மற்றும் குரு விவசாயிகளாக உள்ள ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயி கள் பயன்பெறும் வகை யில் பாசன அமைப்பு களை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடி இணை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப் படுத்தி உள்ளது திட்டத்தி னை வேளாண் பெருமக் கள் பயன்படுத்திய சம்பந் தப்பட்ட மாவ ட்ட வேளாண்மை பொறியி யல் துறை அலுவலகத் தினை அணுகலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.