சுகாதாரத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 8, 2022

சுகாதாரத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

ஈரோடு மாவட்ட பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Data Entry Operator - 3
சம்பளம்: மாதம் ரூ.13,500
தகுதி: பிளஸ் 2, ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டத்துடன் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பதுடன் எம்எஸ் ஆபிஸ் இல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Operation Theatre Assistant - 2
சம்பளம்: மாத் ரூ.11,200
தகுதி: OT Technician பிரிவில் 3 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: MPHW - 6
சம்பளம்: மாதம் ரூ.8,500

பணி: Security Guard - 2
சம்பளம்: மாதம் ரூ.8,500
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்சும்.

பணி: Physiotherapist - 3
சம்பளம்: மாதம் ரூ.13,000
தகுதி: சைகாலஜி பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Early Invention cum Special Education cum Social Worker - 1
சம்பளம்: மாதம் ரூ.17,000
தகுதி: சமூகவியல், சமூகப் பணி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: OT Technician - 1
சம்பளம்: மாதம் ரூ.11,200
தகுதி: OT Technician பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Refrigeation Mechanic - 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: Mechanic in Refrigeration Air Conditioning(MRAC) பிரிவில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் வழங்கப்படும். விண்ணப்பிப்போர் நேரில் சென்று வாங்கி, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
நிர்வாக செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம், ஈரோடு - 638 012
தொலைபேசி எண். 0424-2431020

பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 10.10.2022

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.