பள்ளியில் டீச்சர் ரோபோ..! செயற்கை நுண்ணறிவு, அறிவு புகட்டுமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 2 أغسطس 2022

பள்ளியில் டீச்சர் ரோபோ..! செயற்கை நுண்ணறிவு, அறிவு புகட்டுமா?

ஈகிள் ரோபோ எனப்படும் இளம்பெண் போன்ற உருவம் கொண்ட பெண் ரோபோக்கள் தற்போது மஹா, ஆந்திரா தனியார் பள்ளிகளில் பிரபலமடைந்து வருகின்றன. இந்த ரோபோக்கள் இளம் பெண் ஆசிரியை போல வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்ட இந்த ரோபோக்கள் தற்போது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் திறன் பெற்றது.

இந்த ரோபோ பாடம் எடுக்கும்போது ஆசிரியர் ஒருவரும் அருகில் இருப்பார். பாடம் நடத்தி முடித்ததும் மாணவர்களின் சந்தேகங்களுக்கும் இந்த ரோபோ பதில் அளிக்கிறது. இந்த ரோபோ கல்வித் திட்டம் வெற்றியடைந்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இவற்றை பாடம் எடுக்க அனுமதிக்க வேண்டுமென இந்த ரோபோவின் தயாரிப்பாளர்கள் மாநில பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மாநில கல்வி அமைச்சர் முன்னிலையில் இந்த ரோபோவின் செயல்பாடு விளக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.