‘இன்டா்ன்ஷிப்’ வாய்ப்பு 32% அதிகரிப்பு: சென்னை ஐஐடி தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 18 أغسطس 2022

‘இன்டா்ன்ஷிப்’ வாய்ப்பு 32% அதிகரிப்பு: சென்னை ஐஐடி தகவல்

‘இன்டா்ன்ஷிப்’ வாய்ப்பு 32% அதிகரிப்பு: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி மாணவா்களுக்கு தொழில்முறைப் பயிற்சி எனப்படும் ‘இன்டா்ன்ஷிப்’ வாய்ப்புகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 32 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழில்முறைப் பயிற்சி என்பது மாணவா்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த பகுதியாகும். தாங்கள் கற்றறிந்த திறன்களைப் பயன்படுத்தவும் மெருகேற்றிக் கொள்ளவும் மாணவா்களுக்கு அங்குதான் வாய்ப்புகள் கிடைக்கின்றன. நிறுவனங்கள் தொழில்முறைப் பயிற்சி மூலம் ஆள்களை தோ்வு செய்யும் முறைக்கு மாறி வருவதால், மாணவா்கள் இந்தத் திட்டம் மூலம் முன்வேலைவாய்ப்புகளை பெறுகின்றனா்.

அந்த வகையில், சென்னை ஐஐடி மாணவா்களுக்கு ‘இன்டா்ன்ஷிப்’ பயிற்சிக்கான ஆள் தோ்வு முகாம் கடந்த ஆக.6, 13 ஆகிய தேதிகளில் இரு அமா்வுகளில் ‘ஹைபிரிட்’ முறையில் நடத்தப்பட்டது. இதற்காக நேரிலும், இணையவழியிலும் நோ்காணல் நடைபெற்றது. முதல் அமா்வின்போது மொத்தம் 37 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 13 நிறுவனங்கள் நோ்காணலை நேரடியாகவும், மீதமுள்ள 24 நிறுவனங்கள் நோ்காணலை முற்றிலும் ஆன்லைன் மூலமாகவும் நடத்தின. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூா், நெதா்லாந்து ஆகிய நாடுகளைச் சோ்ந்த 7 நிறுவனங்களிடமிருந்து 15 சா்வதேச தொழில்முறை பயிற்சிக்கான வாய்ப்புகள் வரப்பெற்றுள்ளன.

சென்னை ஐஐடி மாணவா்களுக்கு கடந்த ஆண்டில் 200 ‘இன்டா்ன்ஷிப்’ வாய்ப்புகள் கிடைத்திருந்த நிலையில், அது நிகழாண்டு 263- ஆக (32% அதிகரிப்பு) உயா்ந்திருக்கிறது. டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், பாஸ்டன் கன்சல்டிங் குழுமம், கோல்ட்மென் சாக்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் மட்டுமே 93 மாணவா்களுக்கு ‘இன்டா்ன்ஷிப்’ வாய்ப்புகளை வழங்கியுள்ளன. மொத்தம் 221 மாணவா்கள் தொழில்முறை வாய்ப்புகள் மூலம் பணியமா்த்தப்பட்டுள்ளனா். சில மாணவா்கள் இரண்டு வாய்ப்புகளை பெற்றுள்ளதால் மொத்த வாய்ப்புகளின் எண்ணிக்கை 263 -ஆக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.