அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி - "இளைஞர்களின் கனவை கானல் நீராக்கும் கொடுஞ்செயல்" - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 26 يونيو 2022

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி - "இளைஞர்களின் கனவை கானல் நீராக்கும் கொடுஞ்செயல்"

"இது உழைப்பு மற்றும் அறிவுச் சுரண்டல்" - "இளைஞர்களின் கனவை கானல் நீராக்கும் கொடுஞ்செயல்" - சீமான்

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை கானல் நீராக்கும் இந்த கொடுஞ்செயல் கண்டனத்துகுரியது என தெரிவித்துள்ளார்.

வெறும் 7ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது உழைப்பு மற்றும் அறிவு சுரண்டல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் பணி நிரந்தர போராட்டங்களுக்கு இது வழிவகுக்கும் எனவும், அதிகாரத்திலிருப்பவர்கள் ஊழலில் ஈடுபட இது வாய்ப்பளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.