01.06.2026 அன்று சிறப்பு நிலைபெறும் ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி உடனடியாக ஆணை வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 4 يونيو 2026

01.06.2026 அன்று சிறப்பு நிலைபெறும் ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி உடனடியாக ஆணை வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!

இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சிறப்பு நிலை ஆணை வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!

This is an official memorandum from the Directorate of Elementary Education, Chennai, dated June 3, 2026.

The document addresses requests for special status for secondary grade teachers and BT assistants working in Panchayat Union Primary/Middle schools.

It instructs District Elementary Education Officers to take action to ensure appropriate orders are issued to eligible teachers based on a review of their requests.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.

15.5.6.010190/141/2026, .03.06.2026

பொருள்:

தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணிகள் - தொடக்கக் கல்வி இயக்கக்கத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் - இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அனுமதிக்க கோரும் - விண்ணப்பம் -தொடர்பாக. பார்வை:

சங்கத்தினர்களிடமிருந்து न.02.06.2026, வரப்பெற்ற கோரிக்கை மனு,

பள்ளிக் கல்வித் துறையில் 2004, 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் இளநிலை, இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு பின்னர் அரசாணை நிலை எண்.99, பள்ளிக் கல்வி (வ.செ.) துறை, நாள்.27.06.2006-ன்படி 01.06.2006 முதல் காலமுறை ஊதியத்தில் பணிவரன்முறை செய்யப்பட்டனர்.

மேற்கண்டவாறு பணிவரன்முறை செய்யப்பெற்ற ஆசிரியர்களுக்கு முறையே 01.06.2016-ல் தேர்வுநிலை 01.06.2026 -ல் சிறப்பு நிலை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு உரிய ஆணை பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பார்வையில் கண்டவாறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

மேற்காண் ஆசிரியர் சங்கத்தினரின் கோரிக்கையினை பரிசீலனை செய்யும் வகையில் 01,06,2026-ல் சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தி பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் ஆணை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார். இச்சிறப்பு நிலை வழங்கும் நிகழ்வுகளிலிருந்து புகார்கள் ஏதும் பெறப்பட்டால் தொடர்புடைய அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சிறப்பு நிலை வழங்கும் நிகழ்வினை மாவட்டக் கல்வி அலுவலர் பார்வையிட்டு துரிதமாக வழங்குவதற்கான அறிவுளைகளை / வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.