பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: மாணவர்கள் மகிழ்ச்சி
பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்தது. இதனால், மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.8-ம் தேதி தொடங்க உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நிறைவு நாளில் கணினி அறிவியல், உயிரி வேதியியல், தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் 3.89 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுகளை எழுதினர். இதில் கணினி அறிவியல் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் கேட்டபோது, “இதுவரை இல்லாத அளவுக்கு கணினி அறிவியல் வினாத்தாளில் மறைமுக வினாக்கள் அதிகம் இருந்தன. குறிப்பாக, 5 மதிப்பெண் பகுதியில் 2 கேள்விகளும், 3 மதிப்பெண் பகுதியில் 3 கேள்விகளும் கடினமாக இருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்ததால் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது. ஆனால், நன்றாக படிக்கும் மாணவர்கள்கூட அதிக மதிப்பெண் பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றனர்.
பொதுத் தேர்வு முடிவடைந்ததால், மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு உபச்சார விழாக்களும் நடத்தப்பட்டன. மாணவர்கள் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியேறும்போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க காவல் அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளிலும் தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8 முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வு இன்று நிறைவு
சென்னை, மார்ச் 25: பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமையு டன் (மார்ச் 26) நிறைவு பெறவுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
மொழிப் பாடங்களுக்குப் பிறகு இயற்பியல்,வேதியி யல், கணிதம் ஆகிய பாடங்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் மேற்கண்ட பாடங்க ளில் சென்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறை யும். மேலும் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் கணிசமாக குறையும் என ஆசி ரியர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக் கான பொதுத் தேர்வு கடந்த திங்கள்கிழமை நிறைவடைந்தது.
அதேவேளை பிற பாடப்பிரிவு மாணவர்களுக்கான கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிரி வேதியியல், தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட தேர்வுகள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளன. இத்துடன் பிளஸ் 2 வகுப்பில் அனைத்து மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நிறைவு பெறவுள்ளது.
தொடர்ந்து பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9-இல் தொடங்கி, ஏப்ரல் 20 வரை நடைபெற உள் ளது. 45,000-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மே 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
This newspaper clipping discusses the conclusion of the Class 12 public examinations in Tamil Nadu, mentioning student feedback on the difficulty of science and math papers, the impact on cut-off marks for higher education, and the schedule for evaluation and results release.
Examination End: The Class 12 exams conclude on Thursday, March 26, following a start on March 2.
Difficulty Concerns: Students found physics, chemistry, and mathematics challenging, likely reducing the number of centums and lowering cut-offs for medical and engineering courses.
Evaluation Timeline: Answer paper evaluation is scheduled to take place from April 9 to April 20.
Results Release: Examination results are planned to be announced on May 8.
الأربعاء، 25 مارس 2026
New
பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: மாணவர்கள் மகிழ்ச்சி
12th Tamil Public Exam 2026
Tags
12th Public Exam 2023,
12th Public Exam 2024,
12th public exam 2025,
12th Tamil Public Exam 2026
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.