TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 8 فبراير 2026

TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு



குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு

TNPSC : குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு.

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அஅறிவிப்பு.

அரும்பாக்கம் மையத்தில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குளறுபடி எழுந்த நிலையில் TNPSC நடவடிக்கை

பிப்ரவரி 8, 2026 (ஞாயிற்றுக்கிழமை) இன்று நடைபெறவிருந்த TNPSC குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகள் (Group II & IIA Mains) தொழில்நுட்பக் குளறுபடிகள் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைப்பிற்கான முக்கியக் காரணங்கள் மற்றும் விவரங்கள்:

நிர்வாகக் குளறுபடி: தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட மென்பொருள் பிழையால் (Software Error), பல தேர்வர்களுக்குத் தவறான மையங்கள் ஒதுக்கப்பட்டன.

மையங்களில் குழப்பம்: சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி மற்றும் நந்தனம் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் தேர்வர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில மையங்களில் 300 பேருக்கு மட்டுமே வசதி இருந்த நிலையில் 1,000 தேர்வர்கள் வந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

மறுதேதி: தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது. அறிவிப்பு முறை: மறுதேதி குறித்த விவரங்கள் மற்றும் புதிய ஹால் டிக்கெட் தகவல்கள் தேர்வர்களுக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே SMS மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.

தேர்வர்கள் மேலதிகத் தகவல்களுக்கு TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.