TET தேர்வில் தகுதிப் பெற்றவரா நீங்கள்? தமிழ்நாடு அரசில் அடுத்து வரும் மெகா வாய்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 5 فبراير 2026

TET தேர்வில் தகுதிப் பெற்றவரா நீங்கள்? தமிழ்நாடு அரசில் அடுத்து வரும் மெகா வாய்ப்பு



TET தேர்வில் தகுதிப் பெற்றவரா நீங்கள்? தமிழ்நாடு அரசில் அடுத்து வரும் மெகா வாய்ப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? இந்த வருடமே தமிழ்நாடு அரசின் ஆசிரியராக பணியாற்ற உங்களுக்கு ஒரு வாய்ப்பு வரவுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஜனவரி 30-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகின. இத்தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் அடுத்தது என்ன செய்யலாம் என சிந்தித்துக்கொண்டுள்ளனர். டெட் தகுதித் தேர்வில் இரண்டாம் தாள் தகுதிப் பெற்றவர்களுக்கு இந்தாண்டே தமிழ்நாடு அரசின் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. வரும் மார்ச் மாதம் சுமார் 2,000 காலிப்பணியிடங்கள் வரை காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2025

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-இன் படி, இந்தியாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் அதற்கான தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தகுதித் தேர்வு அந்தந்த மாநிலங்களின் அளவில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இத்தேர்வை நடத்தி வருகிறது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) விதிமுறைகளின் படி, ஆண்டிற்கு 2 முறை டெட் தேர்வை நடத்த வேண்டும். இருப்பினும், தமிழ்நாட்டில் இடைவெளிக்கு பின்னர் 2025-ம் ஆண்டு நவம்பர் 15,16 தேதிகளில் இரண்டு தாள்களுக்கான தேர்வு நடைபெற்றது. 2 தாள்களைக் கொண்டு நடைபெறும் டெட் தேர்வு

1 - 5-ம் வகுப்புகளுக்கு முதல் தாளும், 6 - 8 வகுப்புகளுக்கு இரண்டாம் தாளும் என தகுதித் தாளாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளை, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 வருட தொடக்கக்கல்வி டிப்ளமோ அல்லது 4 வருட பட்டப்படிப்பு முடித்தவர்கள் எழுதலாம்.

அதே போன்று, 2-ம் தாலை பட்டப்படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் அம்ற்றும் 4 வருட ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு மற்றும் பி.எட்ட் முடித்தவர்கள் எழுதலாம்.

​டெட் தேர்வில் தகுதிப் பெற நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் குறைக்கப்பட்ட ஜனவரியில் அரசாணை வெளியாகியது. அதன்படி, 150 மதிப்பெண்களுக்கு பொதுப்பிரிவினர் 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். பிசி/எம்பிசி பிரிவினர் 75 மதிப்பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினர் 60 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

2 தாள் தகுதிப் பெற்றவர்களுக்கு

​டெட் தேர்வு முடிவுகள் ஜனவரி இறுதியில் வெளியானது. இதில் தகுதிப் பெற்றவர்கள், அரசு பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நடத்தப்படும் ஆட்சேர்ப்பு தேர்வை எழுத வேண்டும். அந்த வகையில், டெட் இரண்டாம் தாள் தகுதிப் பெற்றவர்களுக்கு அரசு பணியில் சேர ஒரு வாய்ப்பு வரவுள்ளது. டிஆர்பி-யின் 2026 ஆண்டு திட்ட அட்டவணையின்படி, BT உதவியாளர்/ BRTE ஆசிரியர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகி, இதற்கான தேர்வு ஜூலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டெட் தேர்வில் இரண்டாம் தாள் தகுதிப் பெற்றவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 2000 காலிப்பணியிடங்கள் எதிர்பார்ப்பு

2025-ம் ஆண்டு திட்ட அட்டவணையின்படி, 1,205 காலிப்பணியிடங்களுக்கு இத்தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி, டிசம்பர் மாத தேர்வு நடைபெற்றிருக்க வேண்டும். இருப்பினும், பல்வேறு காரணங்களினால் இத்தேர்விற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. தொடர்ந்து, 2026-ம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையிலும் BT Assistants / BRTE பதவிக்கான தேர்வு இடம்பெற்றுள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டே இத்தேர்வு நடத்தப்பட்டது. திட்ட அட்டவணையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படாத நிலையில், இந்தாண்டு 2,000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெடியா இருங்க

பட்டப்படிப்பிற்கு பின்னர் 2 வருட டிப்ளமோ அல்லது பி.எட் மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 4 வருட B.El.Ed அல்லது 4 வருட ஒருங்கிணைந்த பட்டப்படிப்புடன் பி.எட் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் டெட் இரண்டாம் தாள் தகுதிப் பெற்றவர்கள் பிடி உதவியாளர்/ வட்டாரவள மைய பயிற்றுநர் (BT Assistants / BRTE) தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாதும் https://trb.tn.gov.in/ என்ற டிஆர்பி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கான பாடத்திட்டத்தையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொண்டு படிக்க தொடங்கலாம்.

இதுமட்டுமின்றி, இந்தாண்டு மே மற்றும் அக்டோபரில் இரண்டு முறை டெட் தகுதித் தேர்வு நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.