ஊழியர் ஓய்வூதியம் பெற்றாலும் பணிக்கொடையை வழங்க மறுக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 13 فبراير 2026

ஊழியர் ஓய்வூதியம் பெற்றாலும் பணிக்கொடையை வழங்க மறுக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

ஊழியர் ஓய்வூதியம் பெற்றாலும் பணிக்கொடையை வழங்க மறுக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் Even if an employee receives a pension, gratuity cannot be refused - Madras High Court

ஊழியர் ஓய்வூதியம் (Pension) பெற்றாலும், சட்டப்பூர்வ பணிக்கொடையை (Gratuity) வழங்க மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன. பணிக்கொடை என்பது ஊழியரின் சட்டப்பூர்வ உரிமை, இது ஓய்வூதியத்திற்கு மாற்றானதல்ல. எனவே, உள் விதிமுறைகளைக் காரணம் காட்டி இதை மறுப்பது செல்லாது.

முக்கிய அம்சங்கள்:

சட்டப்பூர்வ உரிமை: 1972 ஆம் ஆண்டு பணிக்கொடை செலுத்தும் சட்டத்தின் கீழ், அரசு சிறப்பு விலக்கு அளிக்காவிட்டால், பணிக்கொடை கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

ஓய்வூதியம் vs பணிக்கொடை: ஓய்வூதியம் பெறுவது, பணிக்கொடை பெறும் உரிமையைப் பாதிக்காது.

வழங்கும் காலம்: ஓய்வு பெற்ற 30 நாட்களுக்குள் பணிக்கொடை வழங்கப்பட வேண்டும்.

தவிர்க்க முடியாத நிலை: ஒழுங்கீனமான நடத்தை அல்லது வன்முறைச் செயல்களுக்காக பணியிலிருந்து நீக்கப்பட்டால் ஒழிய, பணிக்கொடையை நிறுத்தி வைக்க முடியாது. குறிப்பு: சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை ஆகியவை ஊழியரின் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து போன்றது, அதை பறிக்க முடியாது எனத் தீர்ப்பளித்துள்ளது

ஒரு ஊழியர் ஓய்வூதி யம் பெறுகிறார் என்ற காரணத்தால் மட்டும், அவருக்கான சட்டப் பூர்வ பணிக்கொடை தொகையை நிறுவ னம் மறுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளி வுபடுத்தியுள்ளது.

சம்பளம் பெறும் ஊழி யர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த தீர்ப்பு முக்கியத் துவம் பெறுகிறது.

இதுகுறித்து தொழிலாளர் மற்றும் மனிதவள நிபுணர்கள் கூறியதாவது:

"ஓய்வூதியம் பெறு வது பணிக்கொடை உரிமையை பாதிக் காது. நிறுவனங்களின் உள் விதிமுறைகள் அல்லது தனியார் திட்டங்கள், சட்டப்

பூர்வ நன்மைகளை மாற்ற முடியாது. பணிக்கொடைக்கு பதிலாக வேறு திட்டம் அமல்படுத்த விரும்பி னால், அரசாங்கத்தின் அனுமதி அவசியம்.

ஓய்வூதிய திட்டமிடலில் பணிக்கொடை பாது காப்பான, உறுதியான நன்மை என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.”

நீதிமன்றத்தின் முக்கிய 3 கருத்துகள்

பணிக்கொடை 1பெறும் போது வழங்க வேண்டிய அதிகாரப் பூர்வ தொகை.

2 ஒரு நிறுவனம் தனி யாக ஓய்வூதிய திட்டத்தை கொண் டிருந்தாலும், அது பணிக்கொடைக்கு பதி லாக கருதப்படாது.

3'பணிக்கொடை சட் டம் 1972' பிரிவு 5ன் கீழ் உரிய அரசாங்கத்தி டம் இருந்து அதிகாரப் பூர்வ விலக்கு பெற் றிருந்தால் மட்டுமே, பணிக்கொடையை வழங்காமல் இருக்கலாம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.