செயற்கை நுண்ணறிவுத் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டம் சீரமைக்கப்படும் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் - Curriculum will be revamped to suit the needs of Artificial Intelligence - Union Minister Dharmendra Pradhan
சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு பாடத்திட்ட அமைப்பை முழுமையாக மறு சீரமைக்க முடிவு எடுக்கப்பட் டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்தார்.
சென்னை ஐஐடியில் தடை பெற்ற பொங்கல் திருவிழாவில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பிர தமர் மோடியின் தலைமையில் ஏஐ நாக்க உச்சி மாநாடு அடுத்த மாதம் தில்லியில் ஏற்பாடு செய் யப்பட உள்ளது. நாம் ஏற்கனவே யுபிஐ போன்ற எண்ம பரிவர்த் தனை பொது உன்கட்டமைப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளோம். அதிநவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு தயார்படுத் திக் கொள்ளும் அதே வேகத் தில் ஏஐ தாக்கத்திற்கு இந்த உச்சி மாநாட்டை மத்திய அரசு ஏற் பாடு செய்கிறது. இதில், புதுமை படைக்கவும், எதிர்கால நோக்குட னும் இந்தியா தன்னைத் தயார்ப டுத்தி வருகிறது.
அரசு மட்டுமல்ல, கல்வி, விவ சாயம், சுகாதாரம், தளவாடங்கள். உற்பத்தி என அனைத்து சமூகப் பிரிவினரும் இந்த புரட்சிகரமான ஏஐ தொழில்துட்பத்தை எவ் வாறு செயல்படுத்துவது என்பது குறித்துவிவாதித்து ஆலோசித்து வியூகம் வகுத்து வருகின்றனர்.
இதில் அனைத்து அம்சங்களை யும் காண மத்திய கல்வித்துறையும் ஈடுபட்டு இந்த உச்சிமாநாட்டை நடத்துகிறது. இதற்கு சென்னை ஐஐடியும் பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆண்டு, மத்திய அரசு கல் விக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தை சென்னை ஐஐ டியில் அமைக்க முடிவு செய்யப் பட்டது.
அனைத்து தரப்பினரும் ஏஐ-யை ஏற்றுக்கொண்டு தங்களைத் தயார்படுத்தி வருகின்றன. இதில் பெரிய முன்னேற்றத்தை அடைய இருக்கின்றோம். புதிய பாடத்திட்டம்: இதே போல கடந்த செவ்வாய்க்கிழமை என்ஐடி-கள், என்ஐடிஎஸ்இஆர், ஐஐஇஎஸ்டி ஆகிய நிறுவனங்க ளின் நிர்வாகக் குழுவினரைச் சந் தித்தேன். முக்கியமான விஷயங் கள் தீர்மானிக்கப்பட்டது.
இந்தியக் கல்வி நிறுவனங்கள், ஏஐ போன்ற அதிநவீன தொழில் நுட்ப அறிவுள்ள கற்பித்தல் கற் றல் முறைகளை நோக்கி நகரும் நிலையில், உலகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய பாடத் திட்டம் உருவாக்க முடிவு செய் யப்பட்டது.
பண்ணி முதல் ஆராய்ச்சி வரை கற்பிக்கும் முறை கற்பிக் கும் மொழி, புரிந்துகொள்ளும் மொழி ஆகியவை தாய்மொ ழியாக இருக்க வேண்டும் என் அம் முடிவெடுக்கப்பட்டது. எனவே அனைத்து இந்தியக் கல்வி நிறுவனங்களிலும் தாய் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார் அவர்

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.