தொடக்க கல்வித்துறை அலுவலகங்களில் நிதி முறைகேடு - விசாரணை நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல் Teachers urge investigation into financial irregularities in primary education offices
தொடக்க கல்வித்துறை அலுவலகங்களில் நிதி முறைகேடு
விசாரணை நடத்த ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுமஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
குமரி மாவட்டத்தில் தொடக்கக்கல்வி துறையில் ஒன்பது வட்டாரக் கல்வி அலுவலகங்கள் செயல் பட்டு வருகின்றன. இதில் தோவாளை, மேல்புறம் தவிர்த்து மீதம் உள்ள ஏழு வட்டார அலுவலகங்களில் வெளிநபர்களை அமர்த்தி அவர்கள் வாயிலாக ஆசி ரியர்களின் பணபலன் சார்ந்த பட்டியல் தயாரிப்பு பணிகளையும், அலுவல கம் சார்ந்த பணிகளையும் கொடுத்து அவர்களுக்கான ஊதியத்தை ஆசிரியர்களிட மிருந்து ஒரு குறிப்பிட்ட
தொகையினை மாதம் மாதம் வசூலித்து அரசு விதி களுக்கு முரணாக வழங்கப் பட்டு வருகிறது.
அதுபோல் காலாண் டுக்கு ஒரு முறை ஆசிரியர்க ளின் வருமான வரி கணக்கு (ற்றி.டி.எஸ்) அறிக்கை தாக் கல் செய்ய வேண்டியது வட்டார கல்வி அலுவல ரின் பணியாகும். இதற்கும் ஆண்டுக்கு ஒரு முறை ஆசி ரியர்களிடமிருந்து கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
தணிக்கை என்ற பெய ரில் ஒரு சில அலுவலகத் திற்குட்பட்ட அரசு நிதி வீதம் வசூலிக்கப்பட்டுள் ளது.
மேலும் அரசின் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் பள்ளிக்கு நேர உதவிப்பெறும் பள்ளி ஆசி ரியர்களிடம் தலா ரூ.500
டியாக அலுவலகம் மூலம் விநியோகம் செய்வதற்க்கு பதிலாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை வரவழைத்து. எடுத்துச் செல்ல வைப்பதோடு இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்ப டுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கூறிய நிதி முறைகேடுகளை குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் உரிய விசாரணை நடத்தி சம்மந் தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவ டிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குமரி மாவட்ட கிளை கேட்டுக்கொள்கிறது.
الأربعاء، 3 ديسمبر 2025
New
தொடக்க கல்வித்துறை அலுவலகங்களில் நிதி முறைகேடு - விசாரணை நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.