தமிழ்நாடு அரசு நினைத்தால் ஒரு மணி நேரத்தில் CPS திட்டத்தை ரத்து செய்ய முடியும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 28 أكتوبر 2025

தமிழ்நாடு அரசு நினைத்தால் ஒரு மணி நேரத்தில் CPS திட்டத்தை ரத்து செய்ய முடியும்



தமிழ்நாடு அரசு நினைத்தால் ஒரு மணி நேரத்தில் CPS திட்டத்தை ரத்து செய்ய முடியும் Tamil Nadu government can cancel CPS scheme in an hour if it wants to

தமிழ்நாடு அரசு நினைத்தால் ஒரு மணி நேரத்தில் CPS திட்டத்தை ரத்து செய்ய முடியும் - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி

தமிழக அரசு நினைத்தால் சி.பி.எஸ்.,ஐ ஒரு மணி நேரத்தில் ரத்து செய்யலாம்

திண்டுக்கல், அக். 27-"தமிழக அரசு நினைத் தால் (பங்களிப்பு ஓய்வூதி யத் திட்டம்) சி.பி.எஸ்.,ஐ ஒரு மணி நேரத்தில் ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்த முடியும்." என, திண்டுக்கல்லில் நடந்த சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பா ளர் ஜெயராஜராஜேஸ்வ ரன் பேசினார்.

தமிழ்நாடு அரசு அலு வலர் ஒன்றிய மாவட்ட அலுவலகத்தில் தில் நடந்த கூட்டத்தில் மாநில ஒருங் கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் பேசியதா வது: தி.மு.க.,வின் தேர் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேச்சு தல் வாக்குறுதியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்தப் படும் என தெரிவிக்கப் பட்டது.

நான்கரை ஆண்டுகால அரசு ஈடுபடவில்லை. கூடு தல் தலைமைச் செயலர் தி.மு.க., ஆட்சியில் அதற் கான எந்த ந்த முயற்சியிலும் ககன்தீப்சிங் பேடி தலை மையிலான அலுவலர் குழு, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிப்படி செப்., 30 க்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இடைக்கால அறிக்கை யாரிடம் தாக்கல் செய்யப் பட்டது என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.

சி.பி.எஸ்., திட்டத்தில் இணைந்து பணியின் போது உயிரிழந்த 8 ஆயி ரம் பேரது குடும்பத்தினர், ஓய்வுப்பெற்ற ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் பணிக் கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற முடியாமல் பாதிக்கப்பட் டுள்ளனர். 22 ஆண்டுக ளாக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி தமிழக அர சிடம் உள்ளது.

மீண்டும் பழைய ஓய் வூதியத் திட்டத்தை நிறை வேற்றுவதற்கு, ஓய்வூ திய நிதி ஒழுங்காற்று, மேம்பாட்டு ஆணையத் திடம் முன் அனுமதிப் பெற வேண்டிய அவசி யம் இல்லை. தமிழக அரசு நினைத்தால் ஒரே மணி நேரத்தில் சி.பி. எஸ்.,ஐ ரத்து செய்யமுடி யும். இதை வலியுறுத்தி சென்னையில் நவ., 22ல் பேரணி நடத்தப்படும். இவ்வாறு பேசினார்.

மாநில ஒருங்கிணைப் பாளர்கள் பிரெடெரிக் எங் கெல்ஸ், செல்வகுமார், கண்ணன், அரசு உதவிப் பெறும் கல்லூரி அலுவ லர்கள் சங்க மதுரை மண் டலத் தலைவர் வீரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.