மத்திய அமைச்சர்களை சந்திக்க பட்டதாரி ஆசிரியர் கழகம் திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 8 سبتمبر 2025

மத்திய அமைச்சர்களை சந்திக்க பட்டதாரி ஆசிரியர் கழகம் திட்டம்

மத்திய அமைச்சர்களை சந்திக்க பட்டதாரி ஆசிரியர் கழகம் திட்டம்

டெட்' தேர்வு தொடர் பான சமீபத்திய தீர்ப்பு தொடர்பாக, மத்திய அமைச்சர்களை சந்திக்க, பட்டதாரி ஆசிரியர் கழகம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை-உயர்நிலைப் பள்ளி பட்ட தாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செய்தித் தொடர் பாளர் அருளானந்தம் கூறு கையில்,

"கோர்ட் உத்த ரவு தொடர்பாக, ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக பிரதமர் மற்றும் மத் திய கல்வி அமைச்சரை நேரில் சந்திக்க திட்டமிட் டுள்ளோம்.


தமிழக அரசு, சட்ட வல் லுநர் குழுவை அமைத்து உடனடியாக தலையிட்டு, மறு சீராய்வு மனு அல்லது மேல்முறையீடு தாக்கல் செய்ய வேண்டும்.

கல்வித் துறையில் பதவி உயர்வு வழங்கப்படாததால், கற் பித்தல் பணி தேக்கம் அடைந்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு, பட்டதாரி ஆசி ரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுகளை உடன டியாக வழங்கி, தீர்ப்பிலி ருந்து விலக்கு பெற நடவ டிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.