தமிழகத்தில் 16 லட்சம் பேர் காய்ச்சலால் பாதிப்பு மாணவர்கள் முககவசம் அணிய அரசு அறிவுரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 25 سبتمبر 2025

தமிழகத்தில் 16 லட்சம் பேர் காய்ச்சலால் பாதிப்பு மாணவர்கள் முககவசம் அணிய அரசு அறிவுரை

தமிழகத்தில் 16 லட்சம் பேர் காய்ச்சலால் பாதிப்பு மாணவர்கள் முககவசம் அணிய அரசு அறிவுரை

சென்னை, செப். 26- 'காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற, மருத்து வமனை வருவோர் எண் ணிக்கை, இரு மடங் அதிகரித்துள்ளது. மாணவியர் இடையே, காய்ச்சல் காக குறிப்பாக, பள்ளிகளில் மாணவ, பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், மாண என, வர்கள் அனைவரும் முககவசம் அணிவதை உறுதிப்படுத்துங்கள்' பெற்றோருக்கு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஜூலை மாதம் இரண்டாம் வாரத் தில், பரவ துவங்கிய காய்ச்சல், தொடர்ந்து அதி கரித்து வருகிறது.

தற்போது பரவுவது, 'இன்ப்ளுயன்ஸா' வகை காய்ச்சல் என, அரசு தெரி வித்தாலும், அதே அறிகு றிகளுடன், வேறு வகை யான வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும், அதிகம் காணப்படுகின்றன. இந்நிலையில், பெரிய வர்களை விட, பள்ளி செல் லும் குழந்தைகள், அதிகம் காய்ச்சலால் பாதிக்கப்படு வது தெரிய வந்துள்ளது. எனவே, பள்ளி செல்லும் குழந்தைகள், முகக்கவ சம் அணிந்து செல்வதை உறுதிப்படுத்துங்கள் என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரி கள் கூறியதாவது:

தமிழகத்தில், 16 லட் சம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம். எண்ணிக்கையாக பார்க் கும்போது பெரிதாக இருந் தாலும், எட்டு கோடி மக் கள் தொகையில், 2 சதவீத பாதிப்பு தான். இந்த பரு வகாலத்தில் வைரஸ் பர வுவதற்கான சூழல் இருப் பதால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு காய்ச் சல் எளிதில் பரவுகிறது.

எனவே, அவரவர் தங் களை பாதுகாத்து கொள் வது முக்கியம். குறிப்பாக, அலுவலகம், பள்ளி, கல் லுாரிகளில், அதிகளவில் காய்ச்சல் பரவுகிறது.


பெரியவர்களை விட, குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கும்போது, வாந்தி காரணமாக, உணவு உட் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், குழந்தைகளுக்கு சோர்வு அதிகரிப்பதுடன், காய்ச்சல் சரியாவது தாம தமாகும்.

உடல் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். முடிந்தளவுக்கு பள்ளிக்கு குழந்தைகள் முகக்கவ சம் அணிந்து செல்வதை, பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.