ஆசிரியர் தேர்வு வாரியம்: இடைநிலை ஆசிரியர் பணி சார்ந்து இன்றைய (31.05.2025) பத்திரிகைச் செய்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 2 يونيو 2025

ஆசிரியர் தேர்வு வாரியம்: இடைநிலை ஆசிரியர் பணி சார்ந்து இன்றைய (31.05.2025) பத்திரிகைச் செய்தி



ஆசிரியர் தேர்வு வாரியம்: இடைநிலை ஆசிரியர் பணி சார்ந்து இன்றைய (31.05.2025) பத்திரிகைச் செய்தி

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் . 01/2024 நாள் 09.02.2024 ன் படி , இடைநிலை ஆசிரியர் தெரிவிற்கு பணிநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு போட்டித்தேர்வு 2107.2024 அன்று நடத்தப்பட்டது . மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தினால் வழக்கு எண் . WMP.No. 16353/2024 ன்மீது 18.03.2025 அன்று வழங்கப்பட்ட இடைக்காலத் தீர்ப்பாணையின்படி தமிழ் வழித் தேர்வர்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் மற்றும் இறுதி விடைக்குறிப்பு இவ்வாரியத்தால் 2.04.2025 அன்று வெயிடப்பட்டது . தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்களிலிருந்து அறிவிக்கையின்படி , 1 : 1.25 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் 30.01.2025 அன்றும் கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 13.05.2025 அன்றும் இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டது. இப்பட்டியலிகளின்படி , 2.05.2025 முதல் 14.05.2025 வரையிலும் மற்றும் 16.05.2025 அன்றும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது . மேலும் , சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாத பணிநாடுநர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு 22.06.2025 அன்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து , சான்றிதழ் சரிபார்த்தலின் போது பணிநாடுநர்கள் சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ்கள் , ஆசிரியர் தகுதிச் தேர்வு சான்றிதழ் மற்றும் இதர முக்கிய ஆவணங்கள் , பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் தெரிவு நடைமுறை விதிகளை பின்பற்றி தகுதிவாய்ந்த பணிநாடுநர்களைக் கொண்டு இனச்சுழற்சி மற்றும் இதர அரசாணைகளின்படி தமிழ்வழி காலிப்பணியிடங்களுக்கு மட்டும் தற்காலிகத் தெரிவர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இன்று ( 31.05.2025 ) வெளியிடப்படுகிறது.

தற்காலிகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்களுக்கு அவர்கள் சார்ந்த பயன்பாட்டுத் துறைகளின் மூலம் பணிநியமன ஆணைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.

CLICK HERE TO DOWNLOAD PROVISIONAL SELECTION LIST PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.